24 special

மோடி கொடுத்த அசைமென்ட்.. அண்ணாமலை பவன்கல்யாண் கம்போ.. தென்னிந்தியாவில் இனி தான் இருக்கு ஆட்டம்.. ஒட்டுமொத்த கட்சிகளும் அலறல்..

ANNAMALAI,PAWANKALYAN,PMMODI
ANNAMALAI,PAWANKALYAN,PMMODI

ஆந்திர அரசியலில் அதகளம் செய்துவரும் அந்த மாநிலத் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை  சந்தித்துப் பேசினார் . அதற்கடுத்து பவன் கல்யாணின் அரசியல் நடவடிக்கைகள் ஜெட் வேகத்தில் எகிறியது.. கடந்த ஓராண்டாகத் தமிழக அரசியலுக்குள்ளும் தனது கருத்தைப் பதிவுசெய்துவருகிறார். கடந்த ஆண்டு சனாதனம் குறித்த சர்ச்சை எழுந்தபோது, “சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்திலிருந்து சொல்கிறேன்... நீங்கள்தான் அழிந்துபோவீர்கள்” என உதயநிதி ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்தார்.


தற்போது இந்தியா முழுவதும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவரின் பிரச்சாரம் அவரின் செயல்பாடுகள் மக்களை கவர்ந்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் அவர் சனாதனத்தை பற்றியும் இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களை லெப்ட் ரைட் வாங்கி வாங்கி வருவதனால் இந்திய அரசியல் வட்டாரத்தில்  பிரபலமாகி உள்ளார் 

மேலும் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள இந்துக்களை ஒன்றிணைக்க பவன் கல்யாண் மற்றும் அண்ணாமலையை இறக்க முடிவெடுத்துள்ளது டெல்லி தலைமை தெலுங்கானா, கர்நாடாக தமிழகம், கேரளா என நான்கு மாநிலங்களை குறிவைத்து வேலையை தமிழ்கத்தில் தொடங்கியுள்ளது. அண்ணாமலை இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். அதே போல் தான் பவன் கல்யாண் அவர்களும் இந்திய அளவில் பிரபலம் இந்த இருவரை வைத்து தான் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.இனி அண்ணாமலை இந்த நான்கு மாநிலங்களிலும் ஆளும் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஊழல்களை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம் டெல்லி தலைமை அதன் முதல் படி தான் முருகர் மாநாடு. 

 தமிழகத்தை குறிவைத்து பவன்கல்யாணின் நகர்வுகள் அமைந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் மூன்று நாள் ஆன்மிகச் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வந்தவர், சுவாமி மலை, அழகர்கோவில், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் எனத் தமிழகம் முழுக்க ஒரு ரவுண்ட் வந்து வழிபாடு செய்தார் அப்போது நல்ல வரவேற்பு அமைந்தது. சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது, “தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னையை இணக்கமான முறையில் நிவர்த்தி செய்ய வேண்டும்” என இந்திய வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார். இரண்டு வாரங்களுக்கு முன்புகூட, “தமிழ்நாட்டின் பிரச்னைகளை நான் அறிவேன். அவற்றைக் களைய ஜனசேனா கட்சி சார்பில் நான் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறேன்” என்றார். இது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, சுமார் 42 லட்சம் தெலுங்கு மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளைப் பெருமளவு தி.மு.க-தான் அறுவடை செய்து வருகிறது. அந்த வாக்குகளை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்கொண்டுவர, பவன் கல்யாணைப் தமிழகத்தில் இறங்கியுள்ளது என டெல்லி வட்டாரங்கள் கூறுகிறது.இந்த நிலையில் தான் முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண் கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம், இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம்

இந்துக்கள் மட்டும் இந்துவாக இருந்தால் சிலருக்குப் பிரச்சனைஇந்துக்களை சீண்டிப் பார்க்காதீர்கள்; சாது மிரண்டால் காடு கொள்ளாது. மேலும் முருகனின் மறு அவதாரம் முத்துராமலிங்க தேவர் என கூறி மதுரை மக்கள் மனதை கவர்ந்தார். மேலும் மதுரை பக்கம் தெலுங்கு பேசுபர்கள் அதிகம் என்பதால்  பவன் கல்யாணின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.