Tamilnadu

மகாராஷ்டிரா கோவிலுக்கு தமிழ்நாட்டு கோவிலுக்கும் உள்ள மர்ம தொடர்பு....

Temple
Temple

ஆம் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் இக்கோவிலும் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் நகரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவிலும் ஒத்து இருப்பது போல காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. எனினும் கூட மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் உருவாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் இந்த கோவில் உருவாகிவிட்டது என்று கூறப்படுகிறது. பழைய பழமை வாய்ந்த குழு எங்கு உள்ளது என்று தானே கேட்கிறீர்கள்!!!  தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் கழுகுமலை என்னும் ஊர் அமைந்திருக்கிறது. அங்கே அந்த கழுகு நலையில் அமைந்திருக்கும் ஒரு குடைவரைக் கோவள்தான் இத்தகைய பழமை வாய்ந்த கோவிலாக அமைந்திருக்கிறது. இத்தகைய பழமை வாய்ந்த கோவிலினை கழுகுமலை வெட்டுவான் கோவில் என்று கூறுகின்றனர். பொதுவாகவே எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி  நிலத்திலிருந்து மேல்நோக்கி கட்டப்படும்.


எந்த ஒரு கட்டிடத்திற்கும் அஸ்திவாரம் என்பது ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கும். முதலில் அஸ்திவாரம் போட்ட பிறகு கட்டிடங்கள் கட்டப்படும். ஆனால் இந்த கோவிலை  அஸ்திவாரமே இல்லாமல் கட்டினார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா??? ஆம்!! இந்த கோவிலானது அஸ்திவாரங்கள் எதுவும் இல்லாமல் மலையின் மேலிருந்து கீழாக வெட்டப்பட்டு அமைக்கப்பட்ட இந்த கோவிலானது தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கோவில்களில் மிகவும் வித்தியாசமான கோவில்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இப்பவே சிறப்பு வாய்ந்த கோவிலில் கீர்த்தி எட்டாம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் மாறன் செழியன்  அவர்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. எந்த ஒரு விஞ்ஞானமும் கண்டுபிடிக்காத காலகட்டத்தில் இதுபோன்று கோவிலினை மிகவும் அழகான அமைப்புகளும், விமானங்களையும் மற்றும் சிற்பங்களையும் உருவாக்கி அமைக்கப்பட்டு உள்ளது இந்த சிறப்பு வாய்ந்த கழுகுமலை வெட்டுவான் கோவில்!!!

இந்த கழுகுமலை வெட்டுவான் கோவிலினை அரை மழை என்று இன்னொரு பெயரும் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தக் கோவிலினை சதுரமாக வெட்டி எடுத்து அந்த வெட்டி எடுக்க பகுதியின் நடுப்பகுதியினை கலசமாக வைத்து அதன் பிறகு கோவிலுக்கான சிகரத்தையும், தளம் மற்றும் சுவர் போன்ற பல விஷயங்களை மிகவும் வித்தியாசமாக குடைந்து எடுத்து அழகான ஒரு அமைப்பினை கொடுத்துள்ளனர். மேலும் இந்த கோவிலின் கோபுரத்தில் அமைந்திருக்கும் சிலைகள் அனைத்துமே ஒரே பாறையில் செதுக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் பல வித்தியாசமான கோவில்கள் அமைந்திருக்கிறது. அதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கட்டிட கலைகளை பின்பற்றி கட்டப்பட்டு மிகவும் அழகான அமைப்பினை கொண்டிருக்கும். 

ஆனால் இந்த கழிவுகளை அமைந்திருக்கும் வெட்டுவான் கோவில் மொட்ட கோவைகளை காட்டிலும் அதிக அளவில் வித்தியாசங்களைக் கொண்டு எந்த ஒரு அஸ்திவாரமுமே இல்லாமல் கட்டப்பட்ட கோவிலாக இருப்பதால் இது அதிசயம் நிறைந்த கோவில்களில் ஒன்றாக தமிழ்நாட்டு மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கூட இருந்து வருகிறது. ஆனால் மற்ற கோவில்களில் அமைந்திருப்பது போலவே கிழக்கு நோக்கி தான் இந்த கோவிலின் கோபுரத்திலும் சிவனும் பார்வதியும் அமைந்திருக்கிறார்கள். இந்தக் கோவில் மலையினை குடைந்து அமைந்திருப்பதால் சச்சின் தாழ்ந்த நிலையிலேயே இருக்கும். எனவே மலை ஏறி செல்பவர்களுக்கு இந்த கோவில் கண்ணுக்குத் தெரியாது.

இந்த கோவிலுக்கு செல்பவர்கள் மலை ஏறிவிட்டு அங்கு  சுமார் பத்து அடி இறக்கத்தில் கோவிலுக்கு  செல்வார்கள். மேலும் இந்த கோவிலில் பிரம்மன், திருமால் மற்றும் சிவன் ஆகியோர் சித்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இங்கு அமைந்திருக்கும் சிற்பங்கள் அனைத்துமே உயிரோட்டத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல் சில சிலைகள் இன்னும் முழுமை பெறாமல் இருப்பதையும் நம்மால் காண முடியும்!!   தப்போது இந்த கோவில் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!! மேலும் எப்படி இந்த இரண்டு கோவிலுக்கும் ஒற்றுமை என ஆராய்ச்சியாளர்கள் தலையை பிய்த்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துவருகின்றனர் என கூறப்படுகிறது...