Cinema

அவசரமாக நடிகர் சிங்கம் புலி வெளியிட்ட வீடியோ வைரல்!! என்ன விஷயம் தெரியுமா?

ACTOR SINGAM PULI
ACTOR SINGAM PULI

தமிழ் திரையுலகில் ஆக்ஷனும், காதலும்  எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே அளவிற்கு முக்கியத்துவம் காமெடிக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு திரைப்படத்தில் நல்ல நகைச்சுவைகள் இல்லாவிட்டால் அது மிகவும் போர் அடிக்கும் ஒரு படமாகவே மாறிவிடும் நிலைமை தற்போது இருந்து வருகிறது. மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சிரிக்கும் வகையில் அவர்கள் பார்க்கும் படங்களில் காமெடிகள் அமைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து தான் ஒரு திரைப்படத்தை பார்க்கின்றனர். எனவே திரைப்படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக நகைச்சுவைகள் இருந்து வருகிறது. அந்த நகைச்சுவைகளில் நடிக்கும் நடிகர்கள் தற்போது புதிது புதிதாக வந்து கொண்டு இருந்தாலும் கூட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடியனாக  இருந்து வருபவர்கள் இன்றும் பல திரைப்படங்களில் நடித்து தான் வருகின்றனர். 


இந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாகவும் இயக்குனராகவும் வசனகர்த்தாவும் தற்போது வரை இருந்து வருபவர் தான் நடிகர் சிங்கம்புலி. முதலில் தமிழ் சினிமாக்களில் சில படங்களில் நமக்கு காமெடி நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே இயக்குனராக வேண்டும் என்று ஆசை கொண்டு சினிமா துறைக்கு வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் இயக்குனர் சுந்தர்சியிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த இவர் அஜித் நடித்த உன்னை தேடி என்னும் திரைப்படத்தின் துணை இயக்குனராக பணியாற்றி வந்த பொழுது அஜித்திற்கும் இவருக்கும் ஒரு நல்ல உறவு ஏற்பட்டு அதன் பிறகு அஜித் நடிப்பில் ரெட் என்னும் திரைப்படத்தை சிங்கம் புலி இயக்கியுள்ளார்.இவ்வாறு சினிமா துறையில்  இந்த பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு பல திரைப்படங்களை தொடர்ந்து இயக்கியும், மேலும் பல திரைப்படங்களில் காமெடியனாகவும் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் காமெடியனாக நடித்த நான் கடவுள், மாயாண்டி குடும்பத்தார், மிளகாய், கோரிப்பாளையம், மனங்கொத்தி பறவை, நையாண்டி போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்து சூப்பராக நடித்து வந்தார்.

இவ்வாறு தொடர்ந்து இயக்கத்திலும், நடிப்பிலும் தனது திறமையினால் அனைவரின் மனதிலும் தற்போது நீங்காத இடத்தினை பெற்று வரும் நிலையில் தற்போது இவரை வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்று உருவாகியுள்ளது. அந்த கும்பல் குறித்து சிங்கம் புலியே தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். என்னவென்று விரிவாக காணலாம்!!சிங்கம் புலி வீடியோவில் கூறியிருப்பது என்னவென்றால், கடந்த சில நாட்களாகவே எனக்கு மிகவும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது என்றும், மருத்துவமனையில் இருப்பது போலவும், அனைவரிடமும் பணம் கேட்பதாகவும் சிலர் செய்திகளை பரப்பி மற்றவர்களிடமிருந்து பணத்தினை வாங்கி ஏமாற்றி வருகின்றனர். எனக்கு இருப்பது சிங்கம் புலி ஆக்டர் என்ற ஒரே ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் மட்டுமே தான் உள்ளது. எதுவாக இருந்தாலும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட பிறகு எந்த நடவடிக்கையாக இருந்தாலும் எடுங்கள் என்று கூறியுள்ளார்.

மற்றபடி வேறு எந்த போலியான பேஸ்புக் அக்கவுண்ட் நம்பி ஏமாற வேண்டாம் என்றும், நான் யாரிடமும் பணமும் கேட்கவில்லை என்றும், மேலும் பணம் கேட்கும் நிலைமையிலும் நான் கிடையாது என்றும் கூறியுள்ளார். எனவே இதுபோன்று ஏமாற்றி பணம் வாங்கும் கும்பலிடம் இருந்து என்னை சார்ந்தவர்களும், ரசிகர்களும் கொஞ்சம் கவனமாக இருக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்!! இப்படி பேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்தி பணத்தினை வாங்கி ஏமாற்றி வாழும் கும்பல் தற்போது அதிகமாகி கொண்டுள்ளது. எனவே அனைவரும் கவனமாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.