24 special

இயக்குநர் மோகன் ஜியுடன் கைகோர்த்தார் நட்டி..! ஏற்கனவே..செல்வராகவன் வேறு ..மாஸ் சம்பவம் காத்திருக்கு மக்கா...!

Monhan ji
Monhan ji

திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்கள் எடுத்து மக்கள் மத்தியில் அசையா நம்பிக்கை பெற்ற  இயக்குநர் மோகன் ஜி, அடுத்த பட இயக்கம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். 


அதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில், செல்வராகவன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் தற்போது நடிகர் நட்டி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் மோகன்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், சமூதாயத்தில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், அரசியல் கட்சி தலைவர்களையும் தாக்கும் விதத்தில் படம் எடுத்து அதன் மூலம் பேசும் பொருளாக மாறுவது சமீப காலத்திய வெற்றிக்கான ட்ரெண்ட் 



பா.ராஞ்சித் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு விதமானது என்றால், தவறை சுட்டிக்காட்டி படம் எடுப்பதில்   இயக்குநர் மோகன் ஜி மீது அதீத எதிர்பார்ப்பு உண்டு. உதாரணம் திரௌபதி. இன்றளவும் மக்கள் மத்தியில்  கொண்டாடப்படுகிறது.

அடுத்ததாக, நடிகர் சூர்யா எடுத்த ஜெய்பீம் படம் எந்த அளவுக்கு பிரச்சனை ஏற்படுத்தியது என்பது  அனைவரும் அறிந்ததே. அதுவும் குறிப்பிட்ட சமூதாய மக்களை காயப்படுத்தும் விதமாக பட காட்சியில், காலண்டரில் தீச்சட்டி குறியீடு வைத்து உள்ளனர். உண்மையான கதை தழுவி எடுக்கப்பட்டது என்று  விவரிக்கும் போது, இல்லாத ஒன்றை...அதுவும் வில்லன் கதாபாத்திரம் செய்தவர் வீட்டில் இந்த குறியீடு  வைத்து அரசியலாக்கப்பட்டது.

அதற்கு அடுத்த படியாக சமீபத்தில், உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான  தி காஷ்மீர்  பைல்ஸ், நாட்டுப்பற்று மிக்கவரால் கொண்டாடப்பட்டு வந்தது. அதற்கு அடுத்தபடியாக #RRR படம் வலதுசாரியால் கொண்டாடப்பட்டது. பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், 

தமிழகத்தில் மட்டும் சமீப காலமாக  ஒருவரின் படம் திரைக்கு வந்த பின், அதனால் சர்ச்சை கிளம்புகிறது என்றால் அது வெற்றிப்படமாக அமைந்துவிடும். காரணம்...அந்த அளவுக்கு பிரீ ப்ரோமோஷன் கிடைத்து விடும். இந்த நிலையில் அடுத்த டர்னிங் என பார்க்கும் போது, மோகன் ஜி எடுக்கக்கூடிய படத்தில் தனது சம்பவத்தை தரமாக காண்பிக்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே தான் எடுத்த திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் படத்தில், ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து இருந்தார். அப்படி என்றால் இந்த படத்தில் யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த படத்திலும் ரிச்சர்டு தான் ஹீரோவா அல்லது செல்வராகவன் மற்றும் நட்டி வைத்து மிக பெரிய கருத்து படமாக உருவாக  போகிறதா என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், செல்வராகவன், நட்டி அடுத்து.. யார் இப்படத்தில் இணைய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை அரசியல்  சம்பவங்களுக்கு பஞ்சம் இல்லை.  இப்போது சினிமா சம்பவங்களுக்கும் குறைவில்லை என்பது போல நகர்வு இருக்கின்றது.