24 special

நிலவில் தரையிறங்கிய உடனே ரோவர் செய்த சிறப்பான ஒன்று...!அனைத்து நாடுகளும் ஆச்சர்யம்...!

istro, india
istro, india

ஒட்டு மொத்த உலக நாடுகளும் வியக்கும் வண்ணம் இந்தியா நிலவின் தென் துருவத்திற்கு முதல் நாடாக விண்களத்தை வெற்றிகரமாக அனுப்பி மிக பெரிய சாதனை படைத்து இருக்கிறது, இந்த சாதனையை உலகமே கொண்டாடிய நிலையில் சிலர் இந்தியாவிலும் சரி இந்தியாவிற்கு வெளியேயும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.


இந்நிலையில் அவர்கள் மேலும் வயிறு எரியும் வகையில் நிலவில் தரையிரங்கிய ரோவர் முதல் சம்பவம் செய்து இருக்கிறது,சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நிலவில் நேற்றுவெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வரத் தொடங்கியுள்ளது.

இதனை இஸ்ரோ ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ பதிவு செய்துள்ள ட்வீட்டில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, நிலவுக்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வழியாக பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. இந்தியா நிலவில் நடைபயில்கிறது! அடுத்தடுத்த தகவல்கள் விரைவில்.. " என்று தெரிவித்துள்ளது.

லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வெளியே வந்து அதன் வாயிலாக ரோவர் நிலவின் மேல்பரப்பில் இறங்குவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் விடிய விடிய கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அது நிலவின் மேற்பரப்பில் உலாவரத் தொடங்கியுள்ளது.

நிலவில் லேண்டர் தரையிறங்கியதும், பிரக்யான் ரோவர் உலா வரத் தொடங்கியது, அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் காலை பொழுதுதான் நிலவும். இதனால் நிலவில் இந்த 14 நாட்கள் ரோவர் பல குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிலவின் மேற்பரப்பில் உள்ள கணிமங்கள், வாயுக்கள், பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல் நிலாவில் நிலநடுக்கம் ஏற்படுகிறதா? என்பன போல் பல்வேறு ஆய்வுகளையும் ரோவர் மேற்கொள்ளவிருக்கிறது.

சந்திரயான் கலங்களில் உள்ள மின்னணுக் கருவிகள் நிலவின் கடும் குளிரைத் தாங்காது. எனவே, நிலவின் பகல் பொழுதில் மட்டுமே கருவிகள் செயல்படும். அதன் பின்னர் தரையிறங்கிக் கலம், உலாவிக் கலம் ஆகியவற்றின் ஆயுள் முடிந்துவிடும். நிலவின் ஒரு நாள் என்பது 14 பூமி நாள்களுக்குச் சமம். எனவே, தரையிறங்கிக் கலம், உலாவிக் கலத்தின் ஆயுள் 14 நாள்கள்.ரோவர் நிலாவில் உலாவரத் தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடினர். இதன் மூலம் சந்திராயன்-3 மிஷன் பூரண வெற்றி பெற்றுள்ளது. என்றும் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் என்றால் நிலாவில் தரையிறங்கிய ரோவர் நிலவின் தென் பகுதியில் தரை இறங்கியதும் முதல் முயற்சியாக இந்தியாவின் அசோக சக்கர சின்னத்தை நிலவின் தென் பகுதியில் தடம் பதித்து இருக்கிறது, அதன் பிறகு இஸ்ரோ சிம்பளை தடம் பதித்து தனது பணியை மேற்கொண்டு இருக்கிறது, ஒரு காலத்தில் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு சென்றால் இந்தியர்களால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என பேசிய நபர்களின் வாரிசுகள் எல்லாம் இப்போது இந்தியா நிலவில் தனது அசோக சக்கரத்தை தடம் பதித்து இருக்கிறது என்ற செய்தியை பார்த்து கதறி வருகின்றனர்.நிலவில் தரையிறங்கிய முதல் நாளே பலரை கதற செய்து இருக்கிறது சந்திரியான் 3 விண்களம்.