24 special

பொன்னியின் செல்வன் மூலமே அவர்தான் நல்லா எடுத்தீங்க மணி கிழி கிழி என கிழித்த சம்பவம் !

Maniratnam,  aishwariya rai
Maniratnam, aishwariya rai

பொன்னியின் செல்வன் திரைப்படம் டீஸர் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் சூழலில் வழக்கம் போல் மணி ரத்தினம் தனது இடதுசாரிய தனத்தை பொன்னியின் செல்வன் படத்தில் வெளிப்படுத்தி இருப்பதாக பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர் இந்த சூழலில் இணையத்தில் வைரலாகும் பதிவு பின்வருமாறு :-


சில நிமிடம் ஓடும் அந்த ட்ரைலரில் யார் கழுத்திலும் ருத்திராட்சமில்லை, திருநீறு பலரின் நெற்றியில் இல்லவே இல்லை

சோழரின் வரலாற்றில் மறக்கமுடியாதவள் செம்பியன் மாதேவி, செங்கல் சிவாலயத்தையெல்லாம் கற்றளி எனும் கல் ஆலயமாக மாற்றியவள் அவளே, திருநீரும் ருத்திராட்சமுமாக இருந்த அவளை காணவே இல்லை

சோழர்கள் அவர்களுக்குள் அன்று ஆட்சிக்கு மோதினாலும் எல்லோரும் சிவபக்தர்கள், அனுதினமும் சிவபூஜையும் வழிபாடும் அவர்களுக்கு உணவு போல் வழமை

ஆனால் ட்ரைலரின் ஒரு இடத்தில் கூட சிவலிங்கமும், அதனை சோழர்கள் வணங்கியது போல ஒரு நொடி காட்சி கூட இல்லாதது மணிசாரின் பொல்லாத மனதை காட்டுகின்றது.

சிவநேச செல்வர்கள் நிரம்பிய ஈழமண்ணின் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரனின் மனசாட்சி நிச்சயம் அவரை உறங்கவிடாது, எவ்வளவு பெரிய தவறுக்கு இடம் கொடுத்திருக்கின்றார் என்பதை அவர் மனமும் சிவமுமே கேள்வி கேட்கட்டும் நல்ல இந்துக்களின் மனமும் அப்படியே அழுகின்றது.

உலகே பார்க்கும் ஒரு காட்சியில்,வரலாற்றின் படியும் சோழமன்னர்கள் வாழ்வின்படியும் தவிர்க்கமுடியா அங்கமான சிவலிங்கத்தை தவிர்த்திருக்கின்றார்கள் என்றால் எவ்வளவு வன்மமும் குரோதமும் மணிசார் மனதில் இருந்திருக்க வேண்டும்

நாயகன் படத்தில் பிள்ளையார் சதுர்த்தி, ரோஜா படத்தில் காஷ்மீர்  அம்மன் ஆலயம் என உண்மைகளை பேசிய மணிரத்னம், இப்படி மாறிபோனதெல்லாம் சாபம், அவர் பெற்றுவிட்ட பெரும் சாபம் என பிரம்ம ரிஷி என்பவர் குறிப்பிட்டுள்ளார்.