24 special

“பாஜகவை தோற்கடிக்க முடியாது” - பிரசாந்த் கிஷோர் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது பிரசாந்து கிஷோர்.

Prasanth kishore
Prasanth kishore

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அது தோல்வியிலே முடியும். பாஜகவிற்கு சவால் விட எதிர்கட்சிகள் நினைத்தால் முதலில் அதன் பலத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் போன்ற பல்வேறு கருத்துகளை  “பாஜக” என்ற தலைப்பில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்து அவர் பேசியதாவது:


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் அது ஒருபோதும் பலனளிக்காது.  “இந்திய ஜனநாயகத்தில் பாஜக கருத்தியல் ரீதியாக வேறுபட்டு செயல்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கும், எதிர்கட்சிகள் கொள்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. அதனால் பாஜகவை எதிர்கட்சிகளால் தோற்க்கடிக்கு முடியாது” என்றார். 

எதிர்கட்சிகளின் ஒற்றுமை என்பது ஒரு முகப்புத்தகம் போன்றது. அது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்தாலும் பாஜகவிற்கு எதிராக அது வேலை செய்யாது. மேலும் பாரதிய ஜனதாக கட்சியை, எதிர்கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  தோற்க்கடிக்க நினைத்தால், முதலில் எதிர்கட்சிகள் பாஜகவின் பலத்தை புரிந்துகொள்ள வேண்டும். 

“பாஜகவின் கொள்கையில் இந்துத்துவம், தேசியவாதம் மற்றும் நலன் ஆகியவை பாஜகவுடைய மூன்று நிலையான தூண்கள்”. இதில் இருக்கும் 2 கொள்கைகளாவது எதிர்கட்சிகள் புரிந்துகொள்ளாவிட்டால், பாஜகவை தோற்கடிப்பது மிகவும் கடினம். இந்துத்துவ சித்தாந்தத்தை எதிர்த்துப் போராட நினைத்தால், சித்தாந்தங்களில் அடிப்படையில் கூட்டணி இருக்க வேண்டும் என்றார்.

இதன்படி  “காந்தியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள் போன்றவர்களின் சித்தாந்தங்கள் மிகவும் முக்கியமானவை”. ஆனால் அவர்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்து செயல்படக்கூடாது என்றார். 

மேலும் எதிர்கட்சிகள் அல்லது எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றினைவதை ஊடகங்களில் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் ‘நான் பார்ப்பது பாஜக யாருடன் பேசுகிறார்கள், யாருடன் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். யாருடன் டீ விருந்து உட்கொள்கிறார்கள் போன்றவற்றை சித்தாந்தத்தின் உருவாக்கத்தின் மூலம் பார்க்கிறேன்’. இதைபுரிந்து கொள்ளாத வரை எதிர்கட்சிகளுக்குள் கருத்தியல் ரீதியாக கூட்டணி நடக்க வாய்ப்பில்லை என்றார். மேலும் பாஜகவை, எதிர்கட்சிகள் தோற்கடிக்க நினைத்தால் முதலில் அவர்களுடைய சித்தாந்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.  

இந்நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரின் கருத்துக்களை எதிர்கட்சிகள் கவனித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.