24 special

ராஜீவ் காந்திக்கு விழுந்தது ஆப்பு!

ragiv Ganthi,mkstalin
ragiv Ganthi,mkstalin

ராமநாதபுரம் மாவட்டம் மண்டப ஊராட்சி ஒன்றிய தேர்போக்கி கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் சென்னை உயர் நீதிமன்ற வக்கீலான இவர் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பாராட்டியும் திமுக அதிமுக போன்ற கட்சிகளை எதிர்த்தும் பல மேடைகளில் பேசினார் அதற்குப் பிறகு திடீரென்று திமுகவிற்கு மாறி நாம் தமிழர் கட்சியையும் அதிமுகவையும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். இதனை அடுத்து தற்போது பாஜக தமிழகத்தில் ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்கி வருவதால் அவற்றையும் ராஜீவ் காந்தி விமர்சனம் செய்வதை விட்டு வைக்கவில்லை தொடர்ந்து பாஜகவையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் குறிவைத்து தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். மேலும் திமுக ஆட்சி அமைத்த பிறகு மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் கட்சிக்கு நிறைய பணிகளையும் தொண்டுகளையும் கட்சியை வளர்க்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் முதல்வர் மு க ஸ்டாலின் இவரை பல மேடைகளில் பாராட்டியதோடு மாணவர் இயக்கங்களை ஒன்றிணைத்து செயல்படக்கூடிய திறமை மிக்கவர் ராஜீவ் காந்தி என ஸ்டாலின் அவரை புகழ்ந்து பேசி மாநில மாணவரணி தலைவராகவும் ராஜீவ் காந்தியை நியமித்தார். 


இது நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவில் சேர்ந்த ராஜீவ்காந்திக்கு ஒரு உந்துதலாகவும் வேகத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் பாஜகவை எதிர்ப்பதையும் அதிமுக நாம் தமிழர் போன்ற மற்ற கட்சிகளையும் எதிர்ப்பதையும் மேற்கொண்டும் தூண்டி திமுகவை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார் ராஜீவ் காந்தி! இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் ராஜீவ் காந்தி தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தை குறிவைத்து பல முன்னேற்பாடுகளையும் முக்கிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். ஏனென்றால் ராமநாதபுரம் பாஜக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காகவும் ராமநாதபுரத்தில் முக்கிய பாஜக நிர்வாகிகள் நேரடியாக தேர்தலில் ஈடுபடலாம் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டதை அடுத்து நிச்சயமாக இந்த தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சிகளை களம் இறக்காமல் திமுகவே நேரடியாக களம் இறங்க வேண்டும் என்ற முடிவை திமுக தலைமை எடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. இதனால் திமுக தலைமையில் ஒரு வேட்பாளர் கண்டிப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார் அது நாமாக இருக்க வேண்டும் என்பதற்கான இதற்கான திட்டங்களை வகுத்து அறிவாலயத்தை கவரும் வகையிலான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார் ராஜீவ் காந்தி! 

இந்த நிலையில் அரசியல் வட்டாரம் சற்று எதிர்பாராத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராமநாதபுரம் தொகுதியை திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு திமுக தலைமை ஒதுக்கி அதற்கான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் மற்ற தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதி உடன்பாடுகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை ராமநாதபுரத்தை நம்பியே பாடுபட்டு உழைத்து வந்த ராஜீவ் காந்தியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு திமுகவின் வெற்றிக்கு உழைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார். இதன் பின்னணியில் ராஜீவ் காந்தியின் மனதில் சற்று வருத்தமும் அதிக கோபமும் இருக்கலாம் என்ற பேச்சுகள் அறிவாலய வட்டாரங்களில் உலா வருகிறது.