
குன்றிருக்கும் இடம் எல்லாம் முருகப்பெருமாள் கோயில் கொண்டிருப்பார் என்று கூறுவதற்கு ஏற்ப குன்றத்தூர் என்ற உடனே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது முருகப்பெருமான், இந்த கோவிலை தென் தணிகை என்றும் கூறுவார்கள். பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் இந்த தளத்தில் அவரது விருப்பப்படியே இரண்டாம் குலோத்துங்க சோழன் குன்றத்தூரில் முருகனுக்கு என்ற கோவிலை எழுப்பியதாக கூறப்படுகிறது மேலும் சேக்கிழார் பெருமான் குன்றத்தூர் குமரனை தினமும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் இவற்றை வருங்காலத்தில் அனைவரும் நினைவு கூற வேண்டும் என்பதற்காகவே குன்றத்தூர் மலையடிவாரத்தில் சேக்கிழாருக்கு தனிச் சன்னதி அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சேக்கிழார் குரு பூஜையின் போது முருகப்பெருமான் மலையிலிருந்து சேக்கிழார் எழுந்தருளி தரிசனம் கொடுப்பது மரபாகவும் பின்பற்றப்படுகிறது. முருகனுக்கு மிக உகந்த நாட்களான ஆடி கிருத்திகை தை மாத கிருத்திகை கந்த சஷ்டி விழா மற்றும் பல விழாக்கள் குண்டத்தூர் முருகன் கோவிலிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் முருகன் மட்டுமின்றி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் மரத்தடி விநாயகர் ஆகியோரின் சந்ததிகளும் பழமை மாறாமல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவில் படிக்கட்டுகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் குன்றத்தூர் குமரனை வந்து தரிசித்துச் சென்றால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் வரம் கிடைக்கும் என்றும் தடைபட்டு போன திருமணங்கள் விரைவில் கைகூடும் என்றும் கூறப்படுகிறது. அதோடு இங்கு வந்து தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால் குழந்தை பேரு கிடைக்கும் என்பதும் ஐதீகம்! இவற்றை விட இக்கோவிலின் கருவறை மற்ற எந்த கோவிலிலும் இருப்பது போன்று அமைக்கப்படாமல் ஒரு வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டு இருப்பது தனிச்சிறப்பாகும்.
அதாவது கருவறைக்கு வழிகள் இருந்து முருகன், வள்ளி, தெய்வானையின் காட்சிகளை ஒருசேர பார்க்க முடியாது என்றும் கருவறைக்கு வெளியில் நின்று நேரடியாக பார்க்கும் பொழுது முருகன் மட்டுமே தென்படுவார் என்றும் ஒரு பக்கம் தள்ளி வந்து பார்த்தால் முருகன் தெய்வானையும் மறுபக்கம் தள்ளி வந்து பார்த்தால் வள்ளியும் முருகனும் காட்சி அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழ் மக்களின் பெரும் கடவுளாக விளங்குகின்ற முருகப்பெருமானுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் சுப்பிரமணியன் என்ற பெயருக்கு தனி பொருள் இருக்கிறது அதற்கேற்ற வகையிலான பெயரை இந்த குன்றத்தூர் கோவில் தான் கொடுக்கிறது. மேலும் ஞானத்தை தனது அடியார்களுக்கு அருளும் சுப்ரமணியன் எனும் பெயரின் பொருள் கேட்ப தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவரின் அருள் நிறைந்த கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் மிக முக்கிய கோவில் குன்றத்தூர் முருகன் கோயில். மேலும் இக்கோவிலின் மூலவர் சுப்பிரமணியருக்கு விபூதியாலே அபிஷேகம் செய்யப்படுகிறது அப்படி விபூதியாலே அபிஷேகம் செய்யப்படுகிற விபூதியே அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அதோடு முருகனின் விழாக்கள் அனைத்தும் இங்கு விமர்சியாக கொண்டாடப்படுகிறது அதிலும் குறிப்பாக கந்த சஷ்டி விழா என்பது இந்த தளத்தில் எட்டு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது ஆறாவது நாள் சூரசம்ஹாரமும் ஏழாவது நாள் வள்ளி திருமணமும் எட்டாவது நாள் தெய்வானை திருமணம் என இந்த எட்டு நாட்களுமே மிகவும் விமர்சையாக பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்வார்களாம் ஏனென்றால் வள்ளி முருகன் மற்றும் தெய்வானை முருகனின் திருமணங்களை பார்ப்பதற்கு முருகன் மற்றும் தெய்வானை முருகனின் திருமணங்களை பார்த்தால் திருமண தடை இருந்தவர்களுக்கு நீங்கும் என்பது இத்தளத்தின் மிக முக்கிய நம்பிக்கையாக கூறப்படுகிறது.