24 special

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என பாராமல் அந்த வார்த்தையை "H.ராஜா" கூறிவிட்டாரே "அதிர்ந்த" செந்தில்!

Senthilkumar, h.raja
Senthilkumar, h.raja

தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அரசு விழாவில் இந்து முறைபடி பூஜைகள் நடத்த கூடாது என தடுத்ததும் அதனை அவரது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டதும் தமிழகம் முழுவதும் பரவலான செய்தியாக மாறி இருக்கிறது.


இந்த சூழலில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதில் ஒருபகுதியாக பாஜக மூத்த தலைவர் H. ராஜா செந்திலுக்கு கடுமையான எதிர்வினையை நிகழ்த்தி இருக்கிறார், அவர் தற்குறி என குறிப்பிட்டு கொடுத்த பதிலடி செந்தில் தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது குறித்து H. ராஜா குறிப்பிட்டது பின்வருமாறு : அரசு விழாவில் இந்துசமயப்படி பூஜை செய்யக்கூடாது என்று பூஜையை கலைத்த தமிழை சரியாக உச்சரிக்க தெரியாத தற்குறி செந்திலின் இந்து விரோத செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இந்து கோவில்கள் மட்டும் அரசிடம் உள்ளவரை அரசு விழாக்களில் இந்து முறைப்படியான பூஜைதான் நடத்த வேண்டும்.இது திராவிட மாடல் அரசு என்று பேசும் செந்தில் திரு.சேகர் பாபு அலுவலகத்தில் நுழைந்து உங்கள் நிர்வாகத்தின் கீழ் எங்கே சர்ச்,எங்கே மசூதி,எங்கே மணியம்மை டிரஸ்ட் எல்லாத்தையும் அரசுடைமையாக்கு என்று கூச்சலிட தைரியம் உண்டா?

மானம்கெட்ட பச்சை இந்து விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் H. ராஜா செந்திலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். செந்தில் செய்த செயலால் திமுகவிற்கு மக்கள் மத்தியில் இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்ற பாஜகவின் குற்றசாட்டு வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.