24 special

செந்திலுக்கு கிடைத்த சம்பட்டியடி...! சீப்பு பறந்தது...!

mpsenthilkumar,mkstalin
mpsenthilkumar,mkstalin

முன்னாள் ஊடகவியலாளரும் தற்போதைய பாஜக எதிர்பாளராக தன்னை காட்டி கொள்ளும் செந்தில் என்ற செந்திவேலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மக்கள் கொடுத்த சம்பட்டி அடி தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.


சென்னை மக்கள் பலரும் புயல் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பாமல் அவதியில் உள்ள நிலையில் செந்தில் தனது யூடுப் சேனலில் ஆஹா வெள்ளதை நிறுத்தி விட்டார்கள் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் திமுக அரசு சூப்பர் என்பது போன்ற தகவல்களை அவரே உட்க்கார்ந்து கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் செந்தில் வேல் திடீர் என சர்ச்சை பதிவு ஒன்றை போட்டார் அதில்,அப்புறம் வழக்கம் போல பாய்மாருங்க களத்தில் இறங்கிட்டாங்க..தேவாலயம் , பள்ளிவாசல் எல்லாம் திறந்து விட்டாச்சு மக்களுக்காக..ஆர் எஸ் எஸ் சை யாராச்சும் பாத்தீங்களா? என கேட்டு இருந்தார் பள்ளி வாசல், தேவலாயம் என குறிப்பிட்ட செந்தில் கோவில் குறித்து எங்குமே சொல்லவில்லை.

இந்நிலையில் பலரும் செந்தில்வேலை கழுவி ஊற்றிய நிலையில் தற்போது புதுக்கோட்டை ஆலங்குடி மக்கள் செய்த செயல் ஒட்டு மொத்த சென்னை மக்களை நெகில செய்து இருப்பதுடன் எங்கே என கேட்ட செந்திலுக்கு பெரும் சமம்பட்டி அடியாக அமைந்து இருக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெறும் 19ஆவது ஆண்டு ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பூஜை விழாவில் 301 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி ஐயப்பனிடம் மனம் உருகி பிரார்த்தித்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் மீளவும் உடமைகளை இழந்த மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டியும் குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் வேண்டுதல் வைத்தனர்.

அத்தோடு மட்டுமில்லாமல் நாடு செழித்து நல்ல பலத்தோடு விவசாயம் செழிக்க வலியுறுத்தியும் பெண்கள் பூஜைகளில் ஈடுபட்டனர்.

மேலும் சென்னை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அம்மக்கள் முடிவு எடுத்து களத்தில் இறங்கி இருக்கின்றனர் இது தவிர்த்து பல கோவில்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர்.

பல கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் பல கோவில்களில் பொது மக்களை தங்கவைக்க முடியவில்லை எனவும் கோவில்களும் மசூதி சர்ச் போன்று தனி நபர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் கோவில்களிலும் பல்வேறு சேவைகளுக்கு திறந்து விடப்படும் என இப்போது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மதம் ரீதியாக மக்களை பிளவு படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த செந்திலுக்கு ஆலங்குடி மக்கள் தங்கள் பிராத்தனை மூலம் யார் என பதிலடி கொடுத்த நிலையில் மக்கள் மத்தியில் குளருப்படியை உண்டாக்க நினைத்த சீப்பு செந்திலின் சீப்பு பறந்து இருக்கிறது.