24 special

உரிமையை கேட்டால் கைது செய்யும் திமுக....பொங்கி எழுந்த கட்சி தலைவர்கள்!

mk stalin, edapadi
mk stalin, edapadi

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், புதிய பணி நியமனத்திற்கு தேர்வு நடத்தக்கூடாது என TET தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர்கள் ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரித்த அமைச்சர் இதனால் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்தனர். இதனால் இன்று காலை சுமார் 2000க்கும் மேற்பட்ட காவலர்களை கொண்டு கைது செய்தனர். ஆசிரியர்களை விடுவிக்க கோரி பலர் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்களின் கைதுக்கு தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில், "எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் அவர்களே,பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 


2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்,அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான  கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும்,  அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன். 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்". என்று தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, "இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கை  நியாயமானது; உண்மையானது; நிறைவேற்ற வேண்டியது. கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!" என வலியுறுத்திள்ளார்.