24 special

அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ தளபதியை சொல்லி வைத்து முடித்த சம்பவம்! அலறலில் பாகிஸ்தான்... இதுதான் இந்தியாவின் பவர்...

MOIZABBASSHAH,ABINANDHAN
MOIZABBASSHAH,ABINANDHAN

2019ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்.பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் அந்நாட்டின் தலிபான்கள் எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், அப்பாஸ் ஷா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நுழைந்து 26 சுற்றுலா பயணிகளை இந்துவா என கேட்டு நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டுகளை இறக்கி மிக கொடூரமாக சுட்டு கொன்றனர். இதற்கு இந்தியா பாகிஸ்தானுக்கு  உரிய பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமான தளங்களை நம் வீரர்கள் அழித்தனர்.மேலும் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்து பொருளாதார ரீதியாகவும் பலத்த அடியை கொடுத்தது. இதன் பின்னர் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் போரை நிறுத்து கெஞ்சியது பாகிஸ்தான். அதன் பின்னர் தான் போரை நிறுத்தியது இந்தியா. 

இப்போது பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது நம் நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் வாய்ச்சவடால் விடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. இருநாடுகளின் எல்லையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினருக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் கைபர் பக்துன்வா பிராந்தியத்தில் டிடிபி மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாகிஸ்தானின் ராணுவத்தில் மேஜராக பொறுப்பு வகித்து வந்த மொய்ஸ் அப்பாஸ் ஷா கொல்லப்பட்டுள்ளார். இவர் யார் என்றால் நம் நாட்டின் விமானப்படையை சேர்ந்த வீரரான அபிநந்தன் வர்த்தமானை சிறை பிடித்தவர்.கடந்த 2019 ம் ஆண்டில் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத பயிற்சி மையம் மீது குண்டு வீசியது. நம் விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அடித்தது.

அப்போது நம் நாட்டின் விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.  இதையடுத்து விமானத்தில் இருந்து உயிர் தப்ப அபிநந்தன் வெளியேறினார். அவர் நம் நாட்டின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்த நாட்டின் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.

அபிநந்தனைக் கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அபிநந்தனை விடுவிக்க இந்தியா சார்பில் தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியில் மார்ச் 1-ம் தேதி வாகா எல்லை வழியாக அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நடந்தபோது எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. எல்லையில், தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இந்திய ராணுவம் விமானங்களை நிறுத்தி இருந்தது. ஆனால், அபிநந்தனை விடுவித்ததும் அந்த முடிவு பின்வாங்கப்பட்டது.பாகிஸ்தான் அபிநந்தனை அட்டாரி - வாகா எல்லை வழியாக நம்மிடம் ஒப்படைத்தது. அபிநந்தனின் துணிச்சலான செயலுக்காக அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. முன்னதாக பாகிஸ்தானில் அபிநந்தன் வர்த்தமானை சிறை பிடித்தது இந்த மொய்ஸ் அப்பாஸ் ஷா தான். இப்போது டிடிபி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது இந்தியாவுக்கு ஆதரவு அளித்தது ஆப்கானிஸ்தான் என்பது குறிப்படத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவவீரர் அபிநந்தனை கைது செய்து சித்ரவதை செய்த  மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷாவை சொல்லி வைத்து போட்டு தள்ளியுள்ளது ஆப்கானிஸ்தான். இதன் பின் இந்தியா உள்ளதாக பாகிஸ்தான் அலறி கொண்டுள்ளது.