
தமிழக மண் என்பது ஆன்மீக மண். தமிழக மண்ணில் இறை நம்பிக்கை கலாச்சாரம் என்பது அசைக்கமுடியாது ஒன்று. நாளுக்கு நாள் ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் கடவுள் முருகன் அவரை காண கோடிக்கணக்கான மக்கள் தவம் இருந்து வருகிறார்கள். விரதம் இருந்து காவடி எடுத்து முருகரை வழிபட்டு வருகிறார்கள். அதே போல் தற்போது தமிழக மக்களின் ஆண் பெண் இளைஞர்கள் முதல் அனைவரின் கழுத்திலும் ருத்ராட்சை இருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழக மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகர்களின் கடவுள் கருணாநிதி என வாய் கூசாமல் பேசி முருக பக்கதர்களை கேவலப்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கழகம் ஆட்சிக்கு வருமுன், 'நீறில்லா நெற்றி பாழ்' என்ற அவ்வைப்பாட்டியின் அறிவுரைக்கேற்ப, நெற்றியில் திருநீறு, சந்தனம் அல்லது குங்குமம் வைத்து கொண்டுதான் மாணவர்கள் பள்ளி செல்வது வழக்கம்.கிறிஸ்துவ மிஷினரிகளின் நிர்வாகத்தில் பள்ளிகள் இருந்தாலும், மதச் சடங்கை கடைப்பிடிக்க எந்த தடையும் இருந்ததில்லை.தி.மு.க., என்று ஆட்சிக்கு வந்ததோ, அன்று ஆரம்பித்தது பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மக்களுக்கு எதிராக பேச்சுக்கள் நடவடிக்கைகள் துவங்கியது அதுவரை அமைதியாக இருந்த பல பள்ளிக்கூடங்கள் , ஹிந்து மாணவர்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கின.
அத்துடன், பொது வெளியில் பூணுால், குடுமி அறுப்பு போன்ற சேட்டைகளும் அரங்கேறின.ஹிந்து மாணவ - மாணவியர் மனதிலும், ஹிந்துக்களின் உள்ளங்களிலும், 'தாங்கள் ஹிந்து' என்ற உணர்வு எழுந்து விடக்கூடாது என்பதற்காக, தீட்டப்பட்ட சதி இதுஎன இந்து அமைப்புகள் குற்றம்சாட்டினார். அதேநேரம், கிறிஸ்துவர்கள் சிலுவை அணியவும், முஸ்லிம்கள் தாயத்து கட்டி வருவதற்கும் பள்ளிகளில் எந்தவிதமான தடையும் இல்லை.
அதைத்தான், ஹிந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
உடனே, 'மத அடையாளங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், முன்னாள் முதல்வர் காமராஜர், சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மீண்டும் மத அடையாளத்தை புகுத்துவது மிகவும் பிற்போக்குத்தனமானது. பள்ளி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்...' என்று வெகுண்டெழுந்துள்ளார், அமைச்சர் மகேஷ்.
ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடு மாணவர்களுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சீருடை திட்டம் வந்ததே தவிர, மத அடையாளங்களை மறைக்க அல்ல!ஆனாலும், நெற்றியில் மத அடையாளங்களை இடுவதற்கு காமராஜர் தடை விதிக்கவில்லை. ஏனெனில், படிக்கும் காலத்தில் நெற்றியில் திருநீறோடு தான் பள்ளி சென்றோம்; அதை எவரும் தடுத்ததில்லை. நெற்றியில் ஏன் திருநீறு வைக்கவில்லை என்று கேட்ட ஆசிரியர்கள் தான் உண்டு.இன்றைக்கு ஹிந்து மத அடையாளங்களோடு பள்ளிக்கு வரக்கூடாது என்று பிலிம் காட்டும் அமைச்சர் மகேஷ், கிறிஸ்துவ சிறார்கள் சிலுவை அணிந்து வரக்கூடாது என்றும், முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றும் சொல்வாரா? அவ்வளவு தைரியம் உள்ளதா அமைச்சருக்கு! என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் உறுதியேற்பு..பண்பாடு, கலாச்சாரம் காக்க இந்து இளைஞர் முன்னணி சார்பாக உறுதியேற்பு நடந்தது. மேலும் இந்து மாணவ மாணவிகளுக்கு ருத்ராஷம் மகிமை குறித்து விளக்கவும் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள வெளியாகி உள்ளது.