24 special

திரை போராளிகள் எல்லாம் இங்கே வாங்க விரட்டிவிரட்டி வெளுக்க தோணுது மீண்டும் சிக்கிய நடிகர் சூர்யா குடும்பம்

ACTORSURYAJYOTHIKA,MKSTALIN
ACTORSURYAJYOTHIKA,MKSTALIN

பா.ஜ.க  அதிமுக கட்சிகளுக்கு எதிராக விமர்சனங்களை செய்து வந்த திரைபிரபலங்கள், திமுக ஆட்சி வந்த பிறகு நவத்துவரங்களையும் மூடி கொண்டு உள்ளது. அதிமுக ஆட்சியில்  சமூக ஆர்வலர்கள் போல் வெளி வேஷம் போட்டுகொண்டு பல கருத்துக்களை தெரிவித்த நடிகர்கள்  கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு  குரல் கொடுக்கவில்லை. வேங்கை வயல் சம்பவத்தை பற்றி வாய் திறக்கவில்லை அண்ணா பல்கலை சம்பவம் குறித்து வாயை மூடி பேசினார்கள். தாம்பரத்தில் நடந்த சிறுமி பாலியல் கொடுமை பற்றி பேசவில்லை இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம் .தமிழகத்தில் நடக்கும் அலங்கோல திமுக ஆட்சி குறித்து முக்கிய திரை பிரபலங்கள் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள் 


குறிபாப்பாக தமிழக நடிகர் சிங்கம் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஈமு கோழி சத்யராஜ், சிபுரட்சி நாயகர் சித்தார்த்,கம்யூனிஸ்ட் பேசும் விஜய் சேதுபதி, ஹிந்தி புரட்சி நடிகை நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், உலக நாயகன் கமல் ஆகியோர் கடந்த காலங்களில் ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை, இனவாதம், இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்கள். சபரிமலை பிரச்னை போன்ற நேரங்களில் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள். அப்பட்டமாக திமுகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள். 

கடந்த  2020 ஆம் ஆண்டு சாத்தான் குளம் பகுதியில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை தாக்கி உயிரிழந்தார்கள் அப்போது வாயை திறந்த திரை பிரபலங்கள் தற்போது திருப்புவனம் பகுதியில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலியில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமாரை  விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர்  காவலர்களின்  எல்லையற்ற தாக்குதலால், ஒரு கட்டத்தில் அஜித் குமார் மயக்கம் அடைந்துள்ளார். இதன்பின் சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் அஜித் குமாரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர். திரை பிரபலங்கள் வாயை மூடி மௌனம் காத்து வருகிறார்கள் 

இந்த திமுக ஆட்சியில் மட்டும்  இதுவரை 25 சிறை லாக் அப் கொலைகள்  நடந்துள்ளது தமிழக திரை உலகினர் வாய் திறக்கவில்லை. கடந்த ஆட்சியின் போது  இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே...என பதிவிட்டார். ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு மும்பைக்கு 120 கோடி ரூபாயில் பங்களா வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.  

குறிப்பாக லாக் அப் மரணம் குறித்து நடிகர் சூர்யா ஜெய் பீம் என்ற படத்தில் நடித்ததை பெருமையாக பேசினார்  தற்போது  அதே லாக் ஆப் மரணம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து வாயை திறக்காமல்  புகழ்பெற்ற சீஷெல்ஸ் தீவில் விடுமுறையை கழித்து வருகிறார். அதுவும் சகிக்கவில்லை. ஏற்கனவே  நீட் தேர்வு  புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பிரச்னை எழுந்த போது, நடிகர் சூர்யா, கூறுகையில் 3 வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிப்பார்கள். இதற்கு அமைதியாக இருந்தால், இந்த கல்விக் கொள்கை நிச்சயம் திணிக்கப்படும் என்றார்.இன்றைய தலைமுறையினர் ஓரிரு மொழிகளை கூடுதலாக தெரிந்துகொள்வது ஒருவரின் எதிர்காலத்திற்கு நல்லது என்ற எண்ணமே இல்லாமல் சூர்யா இப்படி ஒரு கருத்தை கூறி இருந்தார். அவரது தம்பி கார்த்தி தன் மகன் ஹிந்தியில் பேசுவார் அதற்காகவே நானும் ஹிந்தி கற்றுவருகிறேன் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சூர்யா இதற்கு ஒருபடி மேல் மும்பைக்கே குடிபெயர்ந்து விட்டார். ஊருக்கு மட்டுமே உபதேசம்!