24 special

கைமாறிய பிசினஸ்..... போட்டு கொடுத்த அமைச்சர்... சுற்றி வளைத்த டெல்லி..மகனை தொடர்ந்து மாப்பிளைக்கு குறி வைத்த டெல்லி!

MKSTALIN,DAYANIDHIMARAN
MKSTALIN,DAYANIDHIMARAN

தமிழக அரசியல் களம் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கிநகர்ந்து விட்டது. தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டது. ஆளும் தரப்பில் ரகசிய சர்வேக்கள் அதில் திமுகவுக்கு அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்கள் தான் கிடைத்துள்ளது. அதிலும் உட்கட்சி பிரச்சனை தலைமையின் தலையில் கத்தியை தொங்கவிட்டுள்ளது. இதற்காக கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு  அதனிடம் சென்று குறைகளைச் சொல்லும் நிர்வாகிகளின் பிரச்னைகள் இதுவரை ஒன்றுகூடச் சரிசெய்யப்படவில்லையாம். இதை அறிந்ததால்தான் முதல்வர் ஸ்டாலின், ‘ஏகப்பட்ட உட்கட்சிப் பிரச்னைகளை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்க முடியாது. ஒருங்கிணைப்புக் குழுவை நம்பியிருந்தால், வேலைக்கு ஆகாது’ என்கிற முடிவில், ‘நானே தொகுதிவாரியாக ஆலோசனை நடத்துவேன்’ என்று பொதுக்குழுவில் அறிவித்தார். 


அதைத் தொடர்ந்தே ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ‘இதுநாள் வரையில் கட்சி, ஆட்சி தொடர்பான குறைகளைக் கேட்க, முதல்வர் காது கொடுத்ததே இல்லை. நிர்வாகிகள் யாரேனும் குறைகளைச் சொல்ல முற்பட்டாலும், குறை சொன்ன நிர்வாகிகளையே கடிந்துகொள்வார். எனவே, எந்த நம்பிக்கையில், இப்போது நிர்வாகிகள் அவரிடம் குறைகளைச் சொல்வார்கள்... கூட்டம் எப்படி நடக்கப்போகிறதோ..?’ என்று அச்சப்படுகிறார்கள் சீனியர்கள்.”

இது ஒருபுறம் இருந்தால். மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குப் பிறகு, அந்த பிசினஸில் மேலிடம் மிகக் கவனமாக இருக்கிறது. அதேநேரத்தில், ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் மேல் நடக்கும் இந்த பிசினஸ் மூலம் கிடைக்கும் பல நூறு ஸ்வீட் பாக்ஸுகளை விட்டுவிடவும் மேலிடத்துக்கு மனது இல்லை. அந்த இனிப்பு ஆசையில்தான், பிரச்னைகள் பல இருந்தாலும், ‘கோட்டை மணல் புள்ளிகளை’ வைத்தே இதுநாள் வரையில் தொழில் செய்துவந்தார்கள். ஆனால், வரவு-செலவுக் கணக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்படவே, பிசினஸை கடந்த டிசம்பர் மாதமே வேறு கைகளுக்கு மாற்றத் தயாரானது மேலிடம். 

அதற்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று கவனித்தது ‘முருகன் பெயர் கொண்ட மாவட்ட மாண்புமிகுதான். ஆனால், கோட்டை மணல் புள்ளிகளிடமிருந்து பிசினஸைக் கைமாற்ற, துறையை கவனித்துவந்த அப்போதைய சீனியர் மாண்புமிகு விரும்பவில்லை . அதனால், பிசினஸைக் கைமாற்றுவதில் கடும் இழுபறி நீடித்தது. இந்த நிலையில்‘மணல் விவகாரத்தில்தான் நமக்குப் பெரும் கெட்ட பெயர் வந்திருக்கிறது. அது வேண்டாம். அரசே ஏற்று நடத்த, சட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று தலைமைக்கு நெருக்கமான சில அதிகாரிகள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.”

இதனை தெடர்ந்து தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கிறது. பிசினஸில் எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது. ஸ்வீட் பாக்ஸுகளும் தங்கு தடையின்றி வந்துவிட வேண்டும்’ என்ற கண்டிஷனோடு,மீண்டும் சீனியர் அமைச்சர் கண்காணிப்பில் புது டீமை உருவாக்கியிருக்கிறது மேலிடம்.  மேலும் இவை அனைத்தும் மேலிட மாப்பிளை தான் கண்ட்ரோலாம்.  இதனால் கடுப்பில் உள்ள சீனியர் அமைச்சர் கனிம வள முறைகேடுகள் குறித்து டெல்லிக்கு ஒரு பைலை அனுப்பியுள்ளார். இதில் மாப்பிளை குறித்து தான் பல சீக்ரெட்டுகள் இருக்கிறதாம். இதை தான் டெல்லியும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்   வாசகமாக சிக்கியுள்ளார் மேலிட மாப்பிளை. 

அதன்படி, மாதம் ‘120 ஸ்வீட் பாக்ஸுகள்’ என ‘மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கைமாற்றப்பட்டுள்ளது  மணல் பிஸ்னஸ் இந்த. ஜூன் மாதத்துக்கான ஸ்வீட் பாக்ஸுகளை மேலிடத்துக்குக் கொடுத்துவிட்டு, சென்னை கே.கே.நகரில் அலுவலகத்தையும் திறந்திருக்கிறார் புதிய டெண்டர் எடுத்தவர்.