24 special

வெளிவந்த உதயநிதி விஷயம் . முதல்வருக்கு பேரிடியை இறக்கிய உளவுத்துறை... புட்டு புட்டு வைத்த ரிப்போர்ட்.. ஆடிப்போன கோபாலபுரம்!

UDHAYANITHISTALIN,ANNAARIVALAYAM
UDHAYANITHISTALIN,ANNAARIVALAYAM

அடுத்த முறை திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. அதனால் பெரிய தோல்வியிலிருந்து தப்பிக்க தி.மு.க தேர்தல் பணி முடுக்கி விட்டுள்ளது. எட்டு மண்டலப் பொறுப்பாளர்களை நியமித்து கண்காணித்தாலும் தேர்தல் வியூக வகுப்பாளர்களையும் தனியே களமிறக்கியது. அவர்கள் எடுத்துக் கொடுத்த சர்வே ரிப்போர்ட்டில் 234 தொகுதிகளின் நிலை என்ன என்பதுதான் அறிவாலயத்திற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி.


இதற்கிடையே திமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் விரைவில் கட்சி நிர்வாகிகளான உங்களை அறிவாலயத்தில் நேருக்கு நேர்  சந்தித்து பேசப்போகிறேன் கூறினார் அவர் சொன்னது போலவே உடன்பிறப்பே வா என்னும் தலைப்பில் நிர்வாகிகளுடன் சந்திப்பை கடந்த ஜூன் 13ஆம் தேதி ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளார். 

எதற்காக இந்த நேருக்கு நேர் சந்திப்பு  என் அறிவாலய வட்டாரங்கள் கூறுகையில் திமுகவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் ஷோ டைம்ஸ் நிறுவனம்  சர்வே பணிகளை மேற்கொண்டு வருகிறது.அதே போன்று 8 மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்தில் உள்ள தொகுதிகளில்  உள்ள கள நிலவரங்களை  கூறுவதற்காக தான் இந்த நேருக்கு நேர் மீட்டிங் என கூறியுள்ளது. தொகுதிகள் தொடர்பான ரிப்போர்ட்டையும்  திமுக தலைவரிடம் கொடுத்துளார்கள் மண்டல பொறுப்பாளர்கள்.  

234 தொகுதிகளின் நிலவரம் தொடர்பாக ஸ்டாலினிடம்  அளிக்கப்பட்டுள்ள சர்வே ரிப்போர்ட் நான்கு வகையாக பிரித்து பட்டியல் இடப்பட்டு உள்ளது அதாவது 234 தொகுதிகளில் GFPR எனக் குறிக்கும் வகையில் குட்  தொகுதி சாதகமான தொகுதி சிறிதளவு சாதகமான தொகுதி  வெற்றி பெற வாய்ப்பு இல்லை என 4 வகை  ரிப்போர்ட் கார்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளது இவற்றில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டிப்பாக வெற்றிபெறலாம் என 35 தொகுதிகள்சாதகமான தொகுதிகள் 25 ஓரளவு சாதகமான தொகுதிகள் 35என்றும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என 139 தொகுதிகள் என பட்டியிலிடப்பட்டுள்ளது. இது ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தான் நேருக்கு நேர் மீட்டிங் வைத்துள்ளார் ஸ்டாலின். 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக உடன்பிறப்பே வா' எனும் கட் அவுட் அறிவாலயம் முழுவதும் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பெரிய அளவில் ஸ்டாலின் படமும் பெரியார், அண்ணா, கருணாநிதி படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. வழக்கமாக இடம்பெறும் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி படம் மிஸ்ஸிங். அதற்கு காரணம் இருக்கிறது. வரும் தேர்தலில் கட்சிப் பொறுப்பை உதயநிதியிடம் ஒப்படைக்கவேஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரின் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லாததால் தானே களப்பணியில் இறங்கிவிட்டார். இதன் காரணமாகவே உதயநிதி படம் இடம் பெறவில்லை.

நிர்வாகிகள் சந்திப்புக்கு மறுநாள் 14ம் தேதி சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் மண்டலப் பொறுப்பாளர்கள் 8 பேருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், 'அறிவாலயத்தில் தான் மேற்கொண்ட ஒன் டு ஒன் சந்திப்பில், நிர்வாகிகள் சொன்ன கோஷ்டி மோதல், உட்கட்சிப் பூசலை சரிசெய்வது தொடர்பாகவும் ரெட் பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சரியாக இருக்காது' எனவும் ஆலோசிக்கப்பட்டது.

அந்தவகையில், சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் மற்றும் பொன்முடி ஆகியோருக்கு சீட் கிடைக்காது போல் தெரிகிறது. இதுதவிர, தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்காத மூத்த எம்.எல்.ஏ.க்கள், கன்னி எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கும் சீட் மறுக்கப்பட வாய்ப்புள்ளது. அதுபோல் டெல்டா மணல் மாஃபியா, தென்மாவட்ட கல்குவாரி அதிபர்களுடன் கைகோத்துக் கொண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டு வரும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கும் சீட் கிடைக்காது என்பது நிச்சயம்" என்றார்.