24 special

லூலு விவகாரத்தில் சிக்கிய முக்கிய புள்ளி....

LULU, FRANCE TAMILATCHI
LULU, FRANCE TAMILATCHI

இன்றைய சமூகத்தில் பெண்ககள் முன்பு இருந்ததைப் போல் இல்லாமல் தற்போது மிகவும் தைரியமாக தங்கள் நினைக்கும் செயல்களே செய்து அதன் மூலம் வெற்றியும் கண்டு வருகின்றனர். மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு பெரும்பங்கு வகித்து வருகின்றனர். இவ்வாறு பல துறைகளிலும் சாதித்து வரும் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்று எப்படி இருக்கிறது என்று பார்த்தால் சொல்லும் அளவிற்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்!!!இன்று உள்ள சமூகத்தில் வெளியில் சென்று வேலை செய்தால் தான் பாதுகாப்பு இல்லை என்று சில பெண்களின் குடும்பத்தில் அவர்களை வேலைக்கு வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே குடும்ப வேலைகளை பார்க்க வைக்கின்றனர். அவ்வாறு வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை மட்டும் செய்யும் பெண்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறுவதிலும் தற்போது தயக்கம் ஏற்படும் வகையிலான சம்பவங்கள் நடந்துள்ளது! 


அதாவது இன்றைய காலத்தில் ஒரு குடும்பத்தில் ஆண் பெண் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணமே போதுமானதாக இல்லாமல் போய்விடுகிறது. அதிலும் இப்படி பாதுகாப்பு இல்லை என்று வீட்டிலேயே இருக்கும் பெண்கள் உள்ள குடும்பத்தில் ஆண் மட்டுமே வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும் நிலை உருவாகிறது. மேலும் அவர்களின் குடும்பத்தில் பணத்தின் தேவை அதிகமாகவே இருக்கும். இதனால் அந்த பெண்கள் ஏதேனும் வாங்க நினைத்தால் கூட கணவனின்  வருமானத்தை எதிர்பார்த்து இருப்பார்கள். இப்படி நிலைமையில் அவர்களுக்கு மனதில் என்ன தோன்றும்?? நாமும் ஒரு வேலைக்குப் போய் இருந்தால் நமக்கு தேவையானதை நான் வாங்கி இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். அதன் தொடர்ச்சியாக அவர்கள் வீட்டில் இருந்து வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது ஏதாவது ஒரு வேலையை தேட ஆரம்பிக்கின்றனர். 

இன்ஸ்டாகிராம் facebook போன்ற இணைய தளங்களில் வெளியாகும் work from home விளம்பரங்களை பார்த்து அதற்கு முயற்சிக்கின்றனர். இந்த விளம்பரங்கள் அனைத்தும் உண்மையாகவும் இருப்பதில்லை. இதில் பல ஏமாற்று வேலைகளும் நடந்து கொண்ட தான் உள்ளது. இது போல தான் தற்போது ஒன்று நடந்துள்ளது அது என்னவென்றால்...லூலூ என்ற என்ற பெண் தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வசித்து வந்தவர் ஆவார். இவர் கன்னியாகுமரி போன்ற பகுதியில் தனிமையில் வாடும் குடும்ப பெண்களின் நிலைமையை அறிந்து அவர்களே தவறான வழியில் ஈடுபடுவதற்கு காரணமாக இருந்துள்ளார் என்பது ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த பிரச்சனை குறித்து எந்த தகவல்களும் அதிக அளவில் வெளியில் வராமல் இருப்பதற்கு இதில் பல அரசியல் பிரமுகர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகிறது. இதனை அடுத்து இது போன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. தற்போது இது குறித்து பிரான்சிலிருந்து ஒரு புகார் அளித்துள்ளது.

அதில் மனுதாரர் யூமா சிவா என்கிற யூமா தமிழச்சி என்பவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டு எதிர்மனுதாரர்கள் ஆன DR. BENENT B ANTONY, பெரியார் சரவணஸ் தேளி சிராஜ், அரோக், சிவா சடையன், மணிவண்ணன், திலிபன், மகேந்திரன் உட்பட முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் சமூக வளைதளமான முகநூல் பக்கத்திலும் டுவிட்டரிலும் ஆபாசவார்த்தைகளால் திட்டியதுடன் அவுருடைய நிர்வான புகைப்படங்களை வெளியிட்டு பதிவேற்றம் செய்யூவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இது குறித்தும் தற்போது பிரான்ஸ் தமிழச்சி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கூட இந்த விஷயத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?? என்ற கேள்வியை எழுப்புகிறது!! இதனால் ஒருவேளை  பிரான்ச் தமிழச்சி சொல்லுவதைப் போல இவர்களுக்கும் அதில் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது!!