24 special

திமுக வீசிய கடைசி அஸ்திரத்தை அவரள் பாணியிலேயே திருப்பி வீசிய கட்சிகள் இருந்த ஒன்றும் போச்சா

MKSTALIN,TVKVIJAY
MKSTALIN,TVKVIJAY

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற்றுவிட வேண்டும் என அதன் கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடியை தர ஆரம்பித்துள்ளது., திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக், தவாக. கொமதேக, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வார்டு ப்ளாக் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலிலும் இதே கூட்டணிதான் நீடிக்கும் என்பதுதான் தற்போது வரையிலான நிலை. மேலும் விஜயின் வருகை திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜயுடன் சேர திமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகிறது. தொகுதிகளும் ஸ்வீட் பாக்ஸ்களும்  அதிகம் கிடைக்காவிட்டால் விஜய் பக்கம் தாவ தயாராகி விட்டார்கள். 


கருணாநிதி காலத்தில் திமுக  கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றது என்பது வரலாறு இல்லை., மேலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான இடங்கள் கொடுத்து கூட்டணி வைத்து தான் இதுவரை வெற்றி பெற்று வந்தது. ஆனால் ஸ்டாலின் காலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என குமுறுகின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.1996-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பிளவை சந்தித்து 

மேலும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பார்முலாவையே 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைப்பார் அல்லது கூட்டணி கட்சிக ஆனால் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மக்கள் மத்தியில் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நற்பெயர் இல்லை. 2026 ல் திமுகவுக்கு மிக பெரிய சரிவு ஏற்படும்  நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக தலைமை கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும் பார்முலாவை முன்வைப்பார் எனவும் கூறப்படுகிறது.

இதனால்தான் இப்போதே திமுக கூட்டணிக் கட்சிகள், கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என பேச தொடங்கி இருக்கின்றன.

காங்கிரஸ் நிர்வாகிகள், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகமான தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான், கூடுதல் தொகுதி விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், திமுகவிடம் 2026 சட்டமன்ற தேர்தலுக்குக் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்ற குரல்கள் வெளிப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் மீண்டும் வழங்கப்படாத நிலையில், திமுக நமக்கு ராஜ்யசபா சீட் தரவில்லை.. இதனால் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளைக் கேட்போம்.. அப்படி கொடுக்காத நிலையில் சரியான ஆலோசனைகளை நடத்தி முடிவு எடுப்போம் என அக்கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துரை வைகோ பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெற முயற்சிப்பதுதான்

வழக்கமானது. வாடிக்கையானது. அவர்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட்டு தனிப்பட்ட முறையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்; இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் விவாதித்து முடிவு எடுப்போம் என கூறினார்.

இதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. ஆனால் தரவில்லை இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது என கூறிவிட்டதால் திமுகவை மக்களும் கைவிட்டார்கள்    கூட்டணி கட்சியினரும் கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.