
2026 தேர்தல் முடிவு மூன்று வகையாக வரலாம் என்று அந்த சர்வே முடிவு வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒன்று திமுக தனித்து பெரும்பான்மை பெறாமல், கூட்டணி மூலம் பெரும்பான்மை பெரும். இரண்டாவது அதிமுகவும் தனித்து பெரும்பான்மை பெறாமல், கூட்டணி மூலம் பெரும்பான்மை பெரும். மூன்றாவதாக இரண்டு கூட்டணிகளும் பெரும்பான்மை இல்லாமல் "தொங்கு சட்டசபை" அமையும்.ஆகமொத்தம் தனித்து பெருபான்மை என்பது இல்லை என்பது இதில் காமன் ஸ்டேட்மென்ட்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக சுழல ஆரம்பித்து விட்டார்கள். ஆளும் திமுக படுதோல்வியை தவிர்க்க உட்கட்சியில் பல மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. போட்டோசூட் முதல் ரோடு ஷோ.. புதிய திட்டங்கள் அறிவிப்பு மொழி பிரச்சனை, பிரிவினைவாத பேச்சுக்கள் என தனது வழக்கமான தேர்தல் பணிகளை தொடர ஆரம்பித்துள்ளது. திமுக
இதற்கிடையில் திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் நீக்கப்படுகிறார் என்ற செய்தி, வன்னியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில்அமைந்துள்ளது .இது தொடர்பாக வன்னியர் சமூக முக்கிய பிரமுகர்கள் கூறுகையில், “எப்ப பார்த்தாலும் துரைமுருகனையே ஏன் திமுகவில் குறிவைக்கிறாங்க? இப்பதான் அவரிடம் இருந்து கனிமவளத்துறையை பறிச்சாங்க. இப்ப பொதுச்செயலாளர் பதவியையும் பறிக்கிறாங்களா? ஏன் இப்படி திமுக தலைமை நடந்து கொள்கிறது.. இது வன்னியர்களிடம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்திவிடும்” என எச்சரிக்கை விடுத்துளார்கள்.
இது ஒருபுறம் என்றால் திமுகக் கூட்டணியில் இருக்கும் மதிமுகவையும், விசிகவையும் வெளியேற்றிவிட்டுப் பாமகவை உடைத்து திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக திமுக மீது விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது.இதுவும் வன்னிய சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் அதிமுக – பாஜக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியும், கூட்டணிக் கட்சிகள் அளிக்கும் நெருக்கடியும் திமுகவைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது.
ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் எனக் கடந்த முறைத் தேர்தலை சந்தித்த அதே கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருந்த திமுகவின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் எழத்தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகப் புதிய கட்சிகளைக் கூட்டணிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளைத் திமுக தொடங்கியுள்ளது.
இரட்டை இலக்க எண் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், பெரிய அளவிலான வாக்குவங்கி இல்லாத மதிமுகவையும் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுவிட்டு வடமாவட்டங்களில் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் பாமகவைக் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.அதற்காக பாமக எம்.எல்ஏ க்களை வைத்து ராமதாஸை வைத்து கேம் ஆட தொடங்கியுள்ளது திமுக.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மற்றொரு புறம் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியும், அதிமுக – பாஜக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியும் திமுகத் தலைமையை திக்குமுக்காடச் செய்திருக்கிறது.
கட்சித் தலைமை மற்றும் அமைச்சர்கள் மீது தொண்டர்களுக்குக் கடும் அதிருப்தி எழுந்திருக்கும் நிலையில், வாரத்திற்கு ஒருமுறை மடல் எழுதுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து பேசும் அளவிற்கான பயமும் உருவாகியுள்ளது. மேலும் அமித் ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ள நிலையில் பாஜக 45 தொகுதிகளை குறிவைத்து வேலைகளை தொடங்க உள்ளது. ஜூலை 6 ஆம் தேதி இதற்கான வேலைகளை முடிக்கிவிட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மீட்டிங்கை அரேஞ் செய்துள்ளது. குறிப்பாக தென் மற்றும் நகர பகுதிகளை குறிவைத்து களமிறங்குகிறது பாஜக. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய சட்டமன்ற தொகுதிகளை டார்கெட் செய்துள்ளது.45 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.