24 special

இந்தியாவின் அணு ஆயுதத்தை பார்த்து மிரண்ட உலக நாடுகள்! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது! மொத்தமாக மாறிய களம்!

PMMODI,NUCLEARPOWER
PMMODI,NUCLEARPOWER

இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகளும் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தின. அணு நவீனமய திட்டங்களைத் தீவிரப்படுத்துதல், கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டதாக பிரபல ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவன (எஸ்ஐபிஆா்ஐ) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ள ஈரான், அணு ஆயுதம் தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்ததைத் தொடா்ந்து, அணு ஆயுதம் தயாரித்துவிட முடியும் என்ற நிலையில்  அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஈரான் நிலைகுலைந்துள்ளது. மேலும்  அணு ஒப்பந்தத்தில் ‘ஒப்பந்தத்தில் ஈரான் விரைந்து கையொப்பமிட வேண்டும்; இல்லையெனில், தாக்குதல் தீவிரமடையும்’ என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இதனால், அங்கு போா்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், அணு ஆயுத சக்திமிக்க 9 நாடுகளும் தங்களின் ஆணு ஆயுத இருப்பை விரிவுபடுத்தியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.‘எஸ்ஐபிஆா்ஐ 2025-ஆம் ஆண்டு புத்தகம்’ என்ற தலைப்பிலான தனது ஆய்வறிக்கையை எஸ்ஐபிஆா்ஐ திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட அணு ஆயுத சக்திகொண்ட 9 நாடுகளும், 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்தின. அணு ஆயுதங்கள் நவீனமயம், புதிய ரக அணு ஆயுதங்கள் அறிமுகம் உள்ளிட்ட ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டன.குறிப்பாக, இந்தியா தனது அணு ஆயுத இருப்பை கடந்த ஆண்டு மீண்டும் கணிசமாக அதிகப்படுத்தியது. நவீன ரக அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடா்ந்து மேம்படுத்தியதாக கூறப்படுகிறது. அணு ஆயுத திறன் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே அண்மையில் போர்  மூண்டது. இதில் பாகிஸ்தானை அடித்து துவைத்தது இந்தியா. 

இந்தச் சூழலில் இந்தியா அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது, உலக நாடுகளை கவனிக்க செய்துள்ளது.

மேலும், ஆயுதக் கட்டுப்பாட்டு ஆட்சி முறை கடுமையாகப் பலவீனமடைந்துள்ள நேரத்தில், நாடுகளிடையே புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகி வருவது ஆபத்தானது.கடந்த ஜனவரி நிலவரப்படி, உலக அளவில் இருப்பில் உள்ள அணு ஏவுகணைகளின் எண்ணிக்கை 12,241 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், 9,614 ஏவுகணைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் ராணுவ கையிருப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1974-இல் முதல் முறையாகவும் 1998-இல் இரண்டாவது முறையாகவும் இந்தியா அணுஆயுத சோதனையை நடத்தியது. அடுத்த சில மாதங்களில் பாகிஸ்தானும் அணுஆயுத சோதனையை நடத்தியது. இந்த இரு நாடுகளும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடமில்லை.

1995-இல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சோ்ந்த வடகொரியா, 2003-இல் விலகியது. 2006 முதல் பல முறைய அணு ஆயுத சோதனையை நடத்தி உள்ளது.இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாக நம்பப்பட்டாலும், அந்நாடு இதுவரையில் ஒப்புக் கொள்ளவில்லை. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் அந்த நாடு கையொப்பமிடவில்லை.ரஷியா - 4309,அமெரிக்கா - 3,700சீனா - 600,பிரான்ஸ் - 290,பிரிட்டன் - 225,இந்தியா - 180,பாகிஸ்தான் - 170,இஸ்ரேல் - 90,வட கொரியா - 50

இந்திய  ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் இந்தியா கடந்து வந்த மைல்கற்கள் குறித்தும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக உள்ளது. இந்தியாவின் ராணுவ ஆய்தங்கள் தயாரிப்புகள் அனைத்தும் உலக நாடுகளுக்கு சாவல் விட்டு வருகிறது. இதை பாகிஸ்தான் போரிலே பார்த்து விட்டது  உலக நாடுகள். அப்படி இருக்கையில் இந்தியாவில் உள்ள  அணு ஆயுதங்கள் எந்த அளவிற்கு வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும் என  கூறிவருகிறார்கள்.