24 special

மிஷ்கின் பற்றிய உண்மையை போட்டு உடைத்த விஜய் சேதுபதி!! என்ன இப்படி இருக்காரு..?

Vijay Sethupathi
Vijay Sethupathi

தமிழ் திரையுலகில் நடிகராகவும் வில்லனாகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பல அவதாரங்களை எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து மக்கள் செல்வனாக பிரபலமடைந்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகி பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி மற்றும் 96 என பல வெற்றி படங்களை கொடுத்தார். முன்னதாக செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் தனுசுக்கு நண்பராக நடிக்கும் வாய்ப்ப பெற்ற விஜய் சேதுபதி நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு ஆகிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இப்படி சிறு வேடங்களில் நடித்தவர்தான் இன்று ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்களில் நடிக்கிறார் அவை அனைத்தும் மக்களால் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.


அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி தர்மதுரை, விக்ரம் வேதா, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா என மாறுபட்ட வேடங்களிலும் நடித்து அசத்தார். மேலும் சூப்பர் ஸ்டார், விஜய், கமல் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவரது இயல்பான வில்லத்தனமும் பலரால் ரசிக்கப்பட்டது. இருப்பினும் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு மூன்று திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெறவில்லை அதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படமும் மேரி கிறிஸ்மஸ்ஸும் அடங்கும். ஆனால் தற்பொழுது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டுப்பர் ஹிட் அடித்து வருகிறது. அதாவது குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியும் கண்ட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையிலும் பார்வையாளர்களை இருக்கையில் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கிறது. இதன் மூலம் தனது இயல்பான நடிப்பினால் மீண்டும் மக்கள் மனதைக் கவர்ந்து மக்கள் செல்வன் என்ற பெயருக்கு மகுடம் சூட்டி உள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி பல யூடியூப் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி அவர் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் குறித்து பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பல ஆண்டுகளாகவே இயக்குனர் மிஷ்கினை ஒரு சைக்கோ என்றுதான் நினைத்திருந்தேன் இதனாலே அவர் எடுத்த சைக்கோ திரைப்படத்தை நான் பார்க்காமல் இருந்தேன். 

ஆனால் சமீபத்தில் அவரது சைக்கோ திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படி அப்படத்தை பார்த்து நான் அசந்து போய் உடனே அவரைப் பார்க்க வேண்டும் என்று நேரடியாக அவரை சந்திக்க சென்று விட்டேன். சைக்கோ திரைப்படத்தை குறித்து மட்டுமே சுமார் எட்டு மணி நேரம் நானும் அவரும் உரையாடினோம். அப்பொழுதுதான், உங்களை சைக்கோ என்றுதான் முதலில் நினைத்தேன் என்பதை அவரிடம் நேரடியாக கூறினேன். ஆனால் அதற்குப் பிறகு அவர் தான் கையில் கட்டி இருந்த ரேடோ கடிகாரத்தை கழட்டி எனக்கு பரிசாக கொடுத்தார் அவரை நான் சைக்கோ என்று கூறியதற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஒன்று கிடைத்தது என்று மிஸ்கின் உடன் நடந்த உரையாடலை பகிர்ந்துள்ளார். முன்னதாக விஜய் சேதுபதி தற்போது ட்ரெயின் என்கின்ற திரைப்படத்தில் மிஷ்கிரின் இயக்கத்தில் முதல்முறையாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.