24 special

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய அமுதா IAS, தமிழகம் திரும்பியது ஏன்? "முதல்வர் ஸ்டாலின்" பலே விளக்கம்..!

Amutha iAS
Amutha iAS

இந்தியாவில் முக்கிய பணியை செய்யும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அமுதா IAS தமிழகம் திரும்ப தான் விடுத்த கோரிக்கையே காரணம் என குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு :- உள்ளாட்சி துறையில் செயலாளராக இருக்கக் கூடிய அமுதா ஐ.ஏ.எஸ்., நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது, நான் முதல்வராகப் பொறுப்பேற்போது, அவர் தலைநகர் டெல்லியிலே, அதுவும் குறிப்பாக பிரதமர் அலுவலகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார்.


நான் டெல்லிக்குச் சென்றபோது அவரை சந்தித்துப் பேசினேன். நீங்கள் ஏற்கெனவே தருமபுரி மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்திருக்கிறீர்கள். பல்வேறு அரசுத் துறையிலே பொறுப்பிலிருந்து பணியாற்றி இருக்கிறீர்கள். உங்கள் பணிகளை பார்த்து நான் வியந்ததுண்டு. ஆகவே, ஏன் நீங்கள் டெல்லியில் இருக்கிறீர்கள், தமிழகத்தில் வந்துவிடலாமே, ஒரு முக்கியமான துறையை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது, நீங்கள் சொன்னால் அடுத்த வினாடியே வந்துவிடுகிறேன் என்று என்னிடத்திலே உறுதி தந்தார்.



அதனால்தான் நான் உடனடியாக டெல்லியில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளோடு, பிரதமர் அலுவலகத்தோடு எங்கள் அதிகாரிகள் மூலமாக தொடர்பு கொண்டு, இன்றைக்கு தமிழகத்திற்கு அவரை வரவழைத்து உள்ளாட்சித் துறையினுடைய, ஊரக வளர்ச்சித் துறையினுடைய செயலாளராக இன்றைக்கு அந்தப் பொறுப்பேற்று எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் அவர் பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறார்.

ஆகவே அவர்களுக்கு அமைச்சராக இருக்கும் பெரியகருப்பனுக்கு அந்தத் துறையில் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அமுதா, ஐ.ஏ.எஸ்க்கும் நான் இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார் ஸ்டாலின். அமுதா IAS முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவின் போது அனைத்து அரசு சார்ந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிட தக்கது.