24 special

பாண்டிய மன்னர்களுக்கு கொடுக்காத முக்கியத்துவம் முகலாயர்களுக்கு ஏன்..? அமித்ஷா காட்டம்..!

Amitsha
Amitsha

புதுதில்லி : மஹாராணா சஹஸ்த்ர வர்ஷ கா தர்ம யுத்தம் என்ற நூலை வெளியிட்ட அமித்ஷா வரலாற்றில் இடம்பெற்ற பிழைகளை பற்றி பேசினார். அதோடு முகலாயர்களை பற்றி மட்டுமே எழுதுவதில் வரலாற்று ஆசிரியர்கள் முனைப்புக்காட்டியுள்ளனர் என கூறினார்.


அவர் பேசுகையில் " நான் வரலாற்று ஆசிரியர்களுக்கு சொல்லவிரும்புவது ஒன்றுதான். நம்மிடம் பல பேரரசுகள் இருந்தன. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் மீது மட்டுமே தனிக்கவனம் செலுத்தி அவர்களைப்பற்றி மட்டுமே அதிகம் எழுதியிருக்கின்றனர். நமது பாண்டிய பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அஸ்ஸாமை அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது.

அஹோம்ஸ் பேரரசு அவுரங்கசீப் பக்தியார் கல்ஜி ஆகியோரை படுதோல்வியடைய செய்து அஸ்ஸாமின் இறையாண்மையை காத்து நின்றனர். பல்லவப்பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்த வேளையில் சோழர்கள் 600 ஆண்டுகள் ஆண்டனர். மௌரியர்கள் ஆப்கான் முதல் இலங்கை வரை முழுத்தேசத்தையும் 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். 

குபதப்பேரரசு 400 ஆண்டுகளும் சத்வாகனர்கள் 500 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளனர். சந்திர குப்த மௌரியர் இந்தியாவை முழுக்க பார்வையிட்டு முழுநாட்டிலும் ஒரு பேரரசை நிறுவியிருந்தார். ஆனால் அவரைப்பற்றிய குறிப்புகள் இல்லை. அவர்களை பற்றி எழுத வேண்டும். அப்படி எழுதினால் மட்டுமே நாங்கள் நம்பும் தவறான வரலாறு படிப்படியாக மறைந்து உண்மையான வரலாறு வெளிச்சத்திற்கு வரும்.

இதற்காக பலர் தங்கள் பணியை செய்யவேண்டும். பொதுமக்கள் முன்னர் நமது புகழ்பெற்ற வரலாறு மற்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படவேண்டும். நாம் பெரிய முயற்சிகளை எடுக்கையில் சிறிய பொய்கள் காணாமல்போய்விடும். பெரிய முயற்சியில் நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டும். அரசின் அடிப்படையிலோ அல்லது புத்தகங்களின் அடிப்படையிலோ வரலாறு படைக்கப்படுவதில்லை. 

ஆனால் வரலாறு உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும். உண்மையை எழுத தொடங்கினால் யாராலும் தடுக்க முடியாது. இப்போது நாம் மிக சுதந்திரமாக இருக்கிறோம். நமது வரலாற்றை நாமே எழுதலாம். சிலர் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றை திரித்து எழுதியுள்ளனர்" என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.