24 special

ஸ்பா செல்லும் பெண்களே உஷார்.!!!

ispa issue
ispa issue

இன்றைய உலகத்தில் சாதாரணமாக வெளியில் சென்றால் கூட சிறிய மேக்கப் உடனே செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளார்கள். அதோடு பெரிய பெரிய நிகழ்ச்சிகள் திருமணங்கள் மற்றும் விசேஷங்கள் போன்றவற்றிற்கு செல்லும் பொழுது மேக்கப் செய்வதற்கே பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறார்கள் சில பெண்கள்! இதனால் அந்தந்த வீட்டில் உள்ள ஆண்கள் அதிக நேரம் காத்துக்கொண்டு இருக்கும் நிலை ஏற்படும் ஏன் சில ஆண்கள் தன் மனைவி அல்லது சகோதரிகள் ஏதேனும் விசேஷங்களுக்கு வேகமாக கிளம்ப வேண்டும் என்பதற்காகவே அவர்களை அதிகாலையில் எழுப்பி விட்டு இவர்கள் படுத்து தூங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் மேக்கப் போட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்று கூறிவிட முடியாது ஆனால் பெரும்பான்மையான பெண்கள் தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக ஈடுபாடு கொடுக்கிறார்கள்.


இதனை தவறு என்று கூறிவிட முடியாது ஏனென்றால் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம்! எப்படி மேக்கப் போடுவது ஒரு பெண்களின் விருப்பமாக இருக்கிறதோ அதேபோன்று பியூட்டி பார்லர் களுக்கு சென்று தன் முகத்தை இன்னும் பொலிவு படுத்தவும் கை நகங்கள் முதல் கால் நகங்கள் வரை அனைத்தையும் அழகாக மாற்றிக் கொள்கிறார்கள். இதனை தொழில்நுட்ப முறையிலும் தன் முக பொலிவையும் உடலையும் அழகுப்படுத்தும் முயற்சிகளிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அப்படி சாதாரணமாக நம் முகத்தில் வரும் பருக்களை நீக்குவதற்கு கூட பல சில மருத்துவர்கள் நாடுகிறார்கள் அல்லது பேசியல் என பியூட்டி பார்லர் சென்று தன்னை பொழிவு படுத்திக் கொள்கிறார்கள். இந்த வகையிலே ஸ்பாவும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவர் தன் உடலை முழுவதுமாக மசாஜ் செய்து ரிலாக்சேஷனுக்காகவும் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும் தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள அழகு படுத்திக் கொள்ள இந்த ஸ்பாவிற்கு பலர் சொல்கிறார்கள், ஏனென்றால் இங்கு சூடான நீரில் படுத்து உறங்குவதற்கான வசதிகளும் உச்சந்தலைவுகள் உள்ளங்கால் வரையிலான மசாஜ்கள் நடைபெறுவதால் பலர் ஸ்பாக்களை தேடிச் செல்கிறார்கள் மேலும் இந்த ஸ்பா பெண்களின் அழகை மேம்படுத்தவும் உதவுவதால் பல பெண்களும் தற்பொழுது நல்ல சேவைகளை கொடுக்கப்படுகிற மதிப்பு மிக்க ஸ்பா எங்கிருக்கிறது என்று தேடிச் செல்கிறார்கள். 

ஆனால் சமீப காலமாக சமூகத்தில் இயங்கி வருகின்ற ஸ்பாக்களில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. மேலும் பல பகுதிகளில் ஸ்பா என்ற பெயரில் நடைபெற்று வந்த பாலியல் தொழிலையும் போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்து அங்கு பாலியல் தொழில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்துள்ளனர். இருப்பினும் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் ஸ்பா என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.. இந்த நிலையில்,  பாண்டிச்சேரி உள்ள தனியார் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதை கண்டறிந்து அந்த இடத்தில் பாண்டிச்சேரி போலீசார்கள் சோதனையிட்டதில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் நடந்தது உறுதியாகி, இதில் பத்து பேர் கொண்ட கும்பல் கைது செய்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.

மேலும் இதில் கைது செய்யப்பட்ட 5 பேர்கள் குற்றவாளிகள், இருவர் அந்த ஸ்பாவின் முதலாளி சந்திரகுமார் மற்றும் லதா, மற்ற மூன்று நபர்கள் ஸ்பாவில் வேலைசெய்பவர்கள்! இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடத்தில் நடைபெற்று வந்த இந்த ஸ்பா குறித்த புகார்கள் அதிகமாக இருந்ததால் அதிரடி சோதனையில் நாங்கள் ஈடுபட்டோம் அப்பொழுது இங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். மேலும் இவர்களுக்கு பார்லர் போற பொண்ணுங்கதான் குறி எனவும் கூறுகின்றனர், காவல்துறை வட்டாரத்தில்.இதனை தொடர்ந்து இதை சுற்றி உள்ள வட்டாரங்களில் இயங்கி வரும் ஸ்பாக்களில் தொடர் சோதனைகள் மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் ஸ்பா எந்த அளவிற்கு மருத்துவத்திற்கும் அழகு படுத்துவதற்கும் பயன்படுகிறதோ, அதே அளவுக்கு ஆபத்து நிறைந்திருக்கிறது. அதனால் ஸ்பா, பார்லர் செல்லும் பெண்களும் பாதுகாப்புடன் சொல்ல வேண்டும் என்ற கமெண்ட்டுகள் முன்வைக்கப்படுகிறது.