24 special

அண்ணாமலை செய்த அதிரடி செயல்....!ஆச்சிரியத்தில் மக்கள்...!

annamalai
annamalai

யாத்திரை களத்தில் அண்ணாமலை செய்துவரும் செயல்கள் ஒவ்வொரு நாளும் பல அதிரடி திருப்பங்களை உண்டாக்கி வருகிறது அந்த வகையில் அண்ணாமலை நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் யாத்திரையில் கலந்து கொண்டு இருந்தார்.


அவரிடம் செல்பி எடுக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் இருந்தனர் இந்த சூழலில் யாத்திரையின் ஒரு பகுதியாக கடை வீதி வழியே செல்லும் போது தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க அண்ணாமலை சென்றார்.

மாலையை நிர்வாகிகள் கையில் வைத்து இருந்த நேரத்தில் அண்ணாமலை கீழே குனிந்து தேவர் சிலையின் பாதங்களை வணங்கினார் அதன் பிறகே அண்ணாமலை தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார், அண்ணாமலையின்

இந்த செயலை அங்கிருந்து பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.தேவர் ஒரு சாதிக்கான தலைவர் இல்லை சாதித்த தலைவர் என பாஜகவினர் ஒவ்வொரு முறையும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை தனது யாத்திரையின் இடையே ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் நாட்டிற்கு உழைத்த தலைவர்களுக்கும் தொடர்ச்சியாக அவர்களது சிலைக்கு அண்ணாமலை உரிய மரியாதை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.