24 special

விரைவில் முடிவு "அண்ணாமலை" கொடுத்த எச்சரிக்கை...!

Stallin Annamalai
Stallin Annamalai

பாஜக கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கைதுசெய்யப்பட்ட நிலையில் அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான எச்சரிக்கையை கொடுத்துள்ளார்.


கடந்த செப்டம்பர் 5-ம் தேதி   நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ராசா, இந்துக்கள் குறித்து இழிவாக பேசிய கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக பாஜக தரப்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆ.ராசாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர், மேலும் பாஜக கோவை மாநகர தலைவர் கடுமையாக ராசாவை எச்சரித்தார்.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் இழிவு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று அதிகாலை 6 மணிக்கு கைது செய்ய அழைத்து வந்தனர், அங்கு பாஜக தொண்டர்கள் குவிய தொடங்கியதும் அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட தலைவரை அழைத்து சென்றனர்.

இந்த கைது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததோடு, இது குறித்து ட்விட்டரில் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்ததோடு, தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.

வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. 

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? 

திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.