24 special

பாவமன்னிப்பு கேட்க வந்த 50 இளம் பெண்களை மோசடி செய்த பலே பாதிரியார்

Father
Father

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கல்லூரி பெண்களிடம் ஆபாசமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியில் வந்ததால் பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவு.


கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேரூராட்சி, பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ(29). இவர் பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.  அம்மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பெண்களுடன் பெனடிக் ஆன்றோ தொடர்பில் இருந்ததாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

என்ன நடந்தது கன்னியாகுமரியில்?பிலாங்கலை பகுதியில் உள்ள கிருத்துவ தேவாலயத்தில் பெனடிக் ஆன்றோ பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியிலிருந்து, தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் குறைகளை கேட்பதாக கூறி அவர்களிடம் மொபைல் எண்களை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து, இரவு நேரங்களில் அவர்களுடன் பேசி நெருக்கமாக பயகியுள்ளார். பின்பு வாட்ஸ் ஆஃப் மூலம் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளார். மேலும், நூதன முறையில் பல பெண்களை ஏமாற்றி வீடியோ கால் மற்றும் ஆபாச போட்டோ போன்றவற்றை சேகரித்து உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்.

பெனடிக் ஆன்றோவின் வலையில் சிக்கிய பெண்களை இரவு நேரத்தில் தனியாக வர வைத்து உள்ளாசமாகவும் இருந்துள்ளார். மேலும் வீடியோ கால் மூலம் அப்பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துள்ளார். இதில் அவருடன் 50-க்கும்மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உள்ளாசமாக தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் அவர்களின் ஆபாச புகைபடம், வீடியோவை எடுத்து வைத்து பணம் பறித்ததாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

அந்தவகையில் பெனடிக் ஆன்றோ பெண்களிடம் உள்ளாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் என பல ஆபாச வீடியோக்கள், சமீபத்தில் இணையதளம் மூலம் வைரலாக பரவியது. இந்நிலையில் பெனடிக் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் அவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் காரணமாக தற்போது கேரள மாநிலத்திற்கு தலைமறைவாகி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பாதிரியார் பெனடிக் ஆன்றோவின் செயல்களால் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்தும், பாதிரியாரின் புகைப்படத்தை வைத்து புதுசு புதுசாக மீம்ஸ்களை உருவாக்கியும் சமூக வலையதளத்தின் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.