24 special

4 ஆயிரம் கோடி வெள்ளை அறிக்கை அப்புறம் !..முதல்ல 10 கோடி என்னாச்சு? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

Annamalai, Stalin
Annamalai, Stalin

‛‛பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது சூப்பர் கம்ப்யூட்டருடன் நவீன வானிலை ஆய்வு மையம் அமைக்க அறிவித்த, 10 கோடி ரூபாய் என்ன ஆனது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும். எவ்வளவு மழை பெய்யக்கூடும் என்றும், ஒரு இடத்தில் எத்தனை சென்டி மீட்டர் மழை பெய்யும், பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது.


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது முதல் பட்ஜெட்டில், அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். அவரை இலாகா மாற்றிய பிறகு அந்த பணம் என்ன ஆனது? சூப்பர் கம்ப்யூட்டர் ஏன் வாங்கவில்லை? அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மழை வெள்ளத்தால் தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் எதையும் கண்டுகொள்ளாமல்  கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டில்லிக்குச் சென்றது தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார். 

ஏற்கனவே, சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்பட்ட பொழுது திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் 98 சதவீதம் பணிகள் முடிவடைந்து 4000 ஆயிரம் கோடியில் பணிகள் முழுமையாக வடிகால் பணிகள் சிறப்பாக செயப்படுத்தி விட்டதாக கூறிய நிலையில் சென்னை மாநகரமே தத்தளித்தது அதன் பிறகு பேசிய அமைச்சர்கள் 40 சதவீதம் மட்டுமே பணிகள் நிறைவடைந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் 4000 ஆயிரம் கோடிக்கு வெள்ளை அறிக்கை கேட்டவுடன் 20 ஆயிரம் கோடி மட்டுமே செலவு செய்தோம் என தெரிவித்தனர். இதனால் திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது.

தற்போது தென் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை வாந்தி 3 மாவட்டங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டது, இந்நிலையில் திமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரே வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்க தவறியது என வானிலை ஆய்வு மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர்.இதனால் எதிர்கட்சி தலைவனரான பாஜக தலைவர் அண்ணாமலை முதல்ல 10கோடி வாங்கி டெக்னாலஜி கொண்ட மிஷின்களை வாங்குவதாக தெரிவஹிட்கள் அதனை வாங்கியிருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும், ஆனால், அந்த ஒதுக்கப்பட்ட தொகைக்கு ஏதும் வாங்கவில்லை அதனால் உடனடியாக அந்த தொகைக்கான அறிக்கையை வெளியிட வேண்டும் என தெரிவித்து வருகிறார் அண்ணாமலை. ஆனால், திமுகவில் இருக்கக்கூடியவர்கள் பணம் வேண்டும் நிவாரண தொகையயை உடனடியாக கொடுக்க வேண்டும் என ஊழல் செய்வதில் மும்தரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.