24 special

திமுக ஆட்சியை சரமாரியாக விலாசிய 75 வயது மூதாட்டி

Mk stalin
Mk stalin

75 வயதுடையை மூதாட்டி ஒருவர் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி இருக்கிறது என தெரிவித்த கருத்து உண்மையில் தமிழக மக்களின் மன நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.


இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என கேட்க அம்மா அதை மட்டும் கேட்காதே என்னை பின்னால் வந்து அடித்தாலும் அடிப்பார்கள்... போன முறை 40 ரூபாய் கரண்ட் பில் கட்டினேன் இந்த முறை 200, 300 என வருகிறது என் கணவர் இறந்துவிட்டார் வாரிசு சான்றிதழ் கேட்டு ஒன்றரை வருடம் அழைக்கிறேன் அங்க போ இங்க போ என சொல்றாங்களே தவிர ஒன்னும் நடக்கல முதலமைச்சர் அலுவலகம் வரை கொண்டு கொடுத்துட்டேன் ஒன்னும் நடக்கல இப்ப கூட அந்த பஸ் பிடிக்க தான் நிக்குறேன் நாளு மணி நேரத்திற்கு ஒரு பஸ் தான், பஸ் நிக்குது ஒட்ட டிரைவர் இல்லைனு சொல்றாங்க இந்த லட்சணத்தில் தான் இருக்கு ஒரு வருட ஆட்சி என தான் பட்ட துன்பத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அரசு அலுவலகங்கள் தொடங்கி பல இடங்களில் இதே நிலைமை தான் பணம் கொடுக்காமல் பல அரசு அலுவலகங்களில் வேலை நடப்பது இல்லை சரி இவர்கள் மீது ஆட்சி மாறினால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால் தற்போது இன்னும் இதே நிலைமை அதிகரித்து தான் இருக்கிறது என பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.