24 special

நடிகை விந்தியா போட்ட போடு உதயநிதி தரப்பு அதிர்ச்சி..!

Udhaynithi
Udhaynithi

உதயநிதி ஈரோடு பக்கம் கையில் செங்கலோடு வந்தால் இந்த புகைப்படத்தை காட்டுங்கள் என நடிகையும் அதிமுகவை சேர்ந்தவருமான வித்யா தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சியை உதயநிதி தரப்பிற்கு உண்டாகி இருக்கிறது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் தொடங்கியதில் இருந்தே பரபரப்பு அதிகரித்து காணப்படுகிறது, ஒரு பக்கம் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என ஆளும் கட்சியான திமுக கூட்டணி கட்சிகள் களம் இறங்கி இருக்கிறது, தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக வெற்றி பெற்று களத்தை தங்கள் பக்கம் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாக களத்தில் செயல்படுகின்றன.

இது ஒருபுறம் என்றால் தேர்தல் களத்தில் உதயநிதி ஸ்டாலின் கையில் செங்கலோடு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார், நேற்றைய தினம் பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு செங்கல் திருடன் என பட்டம் கொடுத்தது திமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கிய நிலையில் இன்று வித்யா கையில் பால்டாயில் புகைப்படத்தை காட்டி உதயநிதி பிரச்சாரத்திற்கு வந்தால் இந்த புகைப்படத்தை காட்டுங்கள் என நக்கலாக சிரித்தது வைரலாகி வருகிறது.

உதயநிதி பிரச்சாரம் திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளருக்கு வலு சேர்க்கும் என்று பார்த்தால் இந்த முறை உல்ட்டாவாக மாறி இருக்கிறது ஒரு பக்கம் செங்கல் திருடன் என பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர் அந்த சர்ச்சை முடிவதிற்கு முன்னதாக இப்போது வித்யா உதயநிதி ஈரோடு பக்கம் வந்தால் பால்டாயில் போட்டோவை காட்டுங்கள் என பேசி இருப்பது களத்தில் பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

ஒரே மாதிரி செங்கல் டெக்நிக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்திய உதயநிதி இப்போது எதிர்க்கட்சி தலைவர்களிடம் மட்டுமின்றி நடிகைகளிடமும் பல்பு வாங்கி வருவது இனி வரும் நாட்களில் செங்கலை உதயநிதி கையில் எடுக்க மாட்டார் என்னும் அளவிற்கு விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.