24 special

அடிடா மேளத்தை தென்னிந்தியாவில் கெத்து காட்டும் பா.ஜ.க! கருத்து கணிப்பு சொல்வேதென்ன?

BJP
BJP

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது. இதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளில் மீண்டும் பாஜக தான் அறுதி பெருபான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என கூறியுளது 400 என்ற இலக்கை பாஜக அடையும் என்ற கருத்து கணிப்புகளும் கூறுகின்றது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் சரி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் சரி மோடி தான் மீண்டும் பிரதமர் என அடித்து கூறிவிட்டார்கள். 


பாஜக சற்று பலவீனமாக இருக்கும் தென்னிந்தியா நிலை இந்த தேர்தலில் பாஜகவுக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தல் பாஜகவின் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 400 இடங்களுக்கு மேல் இம்முறை கைப்பற்றுவோம் என்று சூளுரைத்துத்தான் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது. இதன்படி தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களைத் தவிர, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களிலும் சில தொகுதிகளை  என்டிஏ கூட்டணி தொகுதிகளை வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 30 முதல் 33 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி வெல்லும் என்றும்  . அதிமுக 0 முதல் 1 இடத்தையும் என்டிஏ கூட்டணி 0 முதல் 6 இடத்தை வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாக்குசதவீதம் 15 முதல் 18% வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில்  என்டிஏ கூட்டணி 1 முதல் 3 இடங்களைப் பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.கேரளாவில்  என்டிஏ கூட்டணி 22.6 சதவீத வாக்குகள் முதல் 27% வாக்குகள் பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 4 முதல் 6 இடங்களையும் என்டிஏ கூட்டணியும் 9 முதல் 11  தொகுதிகளையும் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1 தொகுதியைப் பெறலாம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  அதேபோல ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் இந்தியா கூட்டணி எந்த இடத்தையுமே வெல்லாது என்றே கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணி 21 முதல் 25 இடங்களையும் பிற கட்சிகள் 0 முதல் 4 இடங்களையும் பெறலாம் என்று கருத்துக் கணிப்பு கூறி உள்ளது.

அதேபோல கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 3 முதல் 5 இடங்களை வெல்லலாம் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் என்டிஏ கூட்டணி 23 முதல் 25 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 1 இடத்தைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை 6 இடங்கள் வரை வெல்லலாம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் கடந்த முறை எந்த இடத்தையும் வெல்லாத என்டிஏ கூட்டணி, இம்முறை 1 முதல் 3 தொகுதிகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், இம்முறை 9 முதல் 11 தொகுதிகளைப் பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டு கடந்த முறை 1 இடத்தைக்கூட வெல்ல முடியாத, பாஜக இம்முறை கூட்டணியில் 21 முதல் 25 தொகுதிகளை வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவைப் பொறுத்தவரை, நிலையில் பெரிதாக மாற்றமில்லை. கடந்த முறை 25 தொகுதிகளை என்டிஏ கூட்டணி பெற்ற நிலையில், இந்த தடவையும் 25 தொகுதிகள் வரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றே கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன