24 special

ஐஸ்வர்யா ராய் குடும்ப விவகாரம் மீண்டும் வெடித்தது...

aishwarya rai
aishwarya rai

தமிழ் ஹிந்தி தெலுங்கு என பழமொழிகளில் மிகவும்  பிரபலமான நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ள ஹீரோயின் தான் ஐஸ்வர்யா ராய்!! தமிழில் முதல் முறையாக ஜீன்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு ஓரளவிற்கு தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வந்தது. அதனை தொடர்ந்து திரைப்படத்தில்  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நடித்து அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு இவருடைய நடிப்பு அமைந்திருந்த காரணத்தினால் ரசிகர்கள் அனைவரும் ஐஸ்வர்யாராயின் ஃபேன்ஸ் ஆக மாறி விட்டார்கள் என்றே கூறலாம். 


அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஹிட்டு கொடுத்த திரைப்படம் தான் எந்திரன்!! இந்தத் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் சூப்பராக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.அது மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் அக்ஷர் பிரேம் கே உம்ராவ் ஜான் படங்களில் ஒன்றாக நடித்து வந்த அபிஷேக் பச்சனை உடன் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பல வருடங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. மேலும் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற மகளும் உள்ளது.

முதலில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இவர்கள் இருந்து வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஆன ஜெயா பச்சன் ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியதாகவும், அமிதாப் பச்சன்  300 கோடி சொத்திற்கு அதிபதியாக இருந்து வந்த நிலையில் அவருடைய ஜூஹீ உங்கள அதை தன்னுடைய மகளான ஸ்வேதா நந்தாவிற்கு பரிசளித்ததாகவும் இவர்களுக்கு இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. என்னைத் தொடர்ந்து சமீபத்தில் அபிஷேக் பச்சன் விவாகரத்து பதிவு ஒன்றிற்கு லைக் போட்டு இருப்பதாகவும், இதனால் ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து பெறப்போவதாகவும் உறுதியாகியுள்ளது என்ற செய்தி வெளியாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கூட ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சியின் போது அமிதாப் பச்சனின் முன்னாள் காதலி ஆன நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் மிகவும் நெருக்கமாக பேசிக் கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சனின் குடும்பத்தில் ஏற்படும் உன் பிரச்சனைகளுக்கு ஒரு வேலை ரேகா தான் காரணமாக இருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது. 

ஏற்கனவே சினிமாவில் உள்ள பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்து செய்து வரும் நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப் போவதாக தற்பொழுது உறுதியாகி செய்திகள் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஜோடிகள் பிரிவை நினைத்து ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய காதல் கணவரான  அபிஷேக் பச்சனை மீண்டும் சேர்வாரா அல்லது நிச்சயமாக இவர்களின் விவாகரத்து நடந்து விடுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!! இது குறித்த செய்தி தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அம்பானி வீட்டு விசேஷத்தில் கூட இவர்கள் அதிகம் ஜோடியாக வளம் வரவில்லை எனவும் வேறு சில தகவல்களை சினிமா விமர்சகர்கள் கசிய விடுகின்றனர்...