24 special

புது மருமகள் வந்தவுடன் அம்பானிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா!!

ambani
ambani

இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் வரிசையில் மிகவும் முக்கியமான தொழிலதிபர் தான் முகேஷ் அம்பானி!! இவருடைய கடைசி மகனான ஆனந்தம் மணிக்கு கடந்த 12ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண நிகழ்ச்சிக்கு முன்பு பலவிதமான நிகழ்ச்சிகள் சில மாதங்களுக்கு முன்பாக இருந்தே தொடங்கி கோலாலமாக தொடர்ந்து நடந்து கொண்டு வந்தது. பல மாதங்களாக திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடந்து வந்த நிலையில் இவர்களின் திருமணமும் கடந்த ஜூலை 12 முதல் 14 ம் தேதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்றது. மேலும் இவர்களின் திருமண நிகழ்வுகளில் பல பாரம்பரியமான நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வந்தது. 


இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பல அரசியல் பிரபலங்களும், திரைத்துறையினரும் தொழில் அதிபர்களும் வந்த வண்ணமே இருந்து வந்தனர். மேலும் நிகழ்ச்சிகளில் அம்பானி குடும்பத்தை சேர்ந்தவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் அணிகலன்கள் குறித்த செய்திகளும் அவ்வபோது வெளியாகி அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. மிகவும் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமண நிகழ்ச்சிகள் அனைவருமே திரும்பிப் பார்க்கும் வகையில் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த திருமண நிகழ்ச்சிக்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. 

அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகள் மத்திய தரைகடல் கப்பலில் நடத்தப்பட்டு வந்ததும், திருமணத்தை ஜியோ மாநாடு  மையத்தில் வைத்து நடத்தியது குறித்த செய்திகளும் வெளியாகியது. ஜூலை மாதம் 12ஆம் தேதி நடந்த திருமணத்திற்கு மார்ச் மாதத்தில் இருந்து பல சடங்குகளும் நிகழ்ச்சிகளும் இந் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நல்லபடியாக ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்க்கும் திருமணம் நடந்து முடிந்தது. மேலும் இவர்களின் திருமண நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்பொழுது மேலும் ஒரு செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்.. 

ஏற்கனவே கோடிக்கணக்கான வருவாய் வரும் முகேஷ் அம்பானிக்கு தற்பொழுது இன்னும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனது மகன் திருமணம் முடிந்து புதிய மருமகளான ராதிகா மெர்சன்ட் வீட்டுக்குள் வந்த காரணத்தினால் அதிர்ஷ்டம் அடித்தது போன்று ரிலையன்ஸ் அதிபரான முகேஷ் அம்பானிக்கு பத்து நாட்களில் ரூபாய் 25 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 

அது மட்டுமல்லாமல் ஆனந்தம் பணி மற்றும் ராதிகா ஆகிய இருவரின் திருமண நாள் அன்று ரிலையன்ஸ் பங்குகள்  ஒரு சதவீதத்துக்கு ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதத்தில் ரிலையன்ஸ் பங்கு 6.65 சதவீதமாகவும், கடந்த ஆறு மாதத்தில் 6.65 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வளவு ஆடம்பரமாக மகனின் திருமணத்தை செய்திருந்தாலும் கூட இவர்களின் செல்வம் குறையாமல் இன்னும் அதிகமாகவே ஆகி உள்ளது என்று கூறும் அளவிற்கு கடந்த பத்து நாட்களில் அம்பானியின் சொத்து மதிப்பானது 3 பில்லியன் டாலரில் அதாவது 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த ஜூலை 5ஆம் தேதி ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் அம்பானியின் சொத்து மதிப்பை 118 பில்லியன் டாலர் என்று குறிப்பிட்ட நிலையில் ஜூலை 12ஆம் தேதி இவர்களின் சொத்து மதிப்பானது 121 அதிகரித்து இப்பொழுது 11வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து புது மருமகள் வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தவுடன் அதிர்ஷ்டம் அடித்தது போல வருமானம் வருகிறது என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.