24 special

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை!! இப்படிப்பட்ட நிலைமையிலும் மகன் செய்த காரியம்!!

ajith , shalini
ajith , shalini

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் வரிசையில் மிகவும் முக்கியமான நடிகராக இருந்து வருபவர் தான் அஜித் குமார்!! இவர் முதன் முதலில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்து மிகவும் பிரபலமான நடிகராக உருவாகியுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்னும் திரைப்படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திலும் தற்பொழுது நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் கார் மற்றும் பைக் ரேஸ் போன்றவைகளிலும் கலந்து கொண்டு அவ்வபோது சாதித்து வருகிறார். 


அது மட்டுமல்லாமல் சினிமா உலகிலும் அதிக அளவில் ரசிகர்களை சம்பாதித்து இன்று தனது ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் அமர்க்களம் என்னும் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அதில் ஹீரோயினியாக நடித்து வந்த நடிகை பேபி ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் அஜித்குமார்  சினிமாவிலும் தனது கேரியரிலும் எந்த அளவிற்கு ஈடுபாடுடன் இருக்கிறாரோ அதே அளவிற்கு தனது குடும்பத்தின் மீது அதிக அளவில் அக்கறையும் கொண்ட ஒருவராக இருந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் அஜித்குமாருக்கு தொடர்ந்து உடல்நல குறைவு மற்றும் விபத்துகள் ஏற்பட்டு அவ்வபோது சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டு வந்த செய்திகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித்குமார் குணமடைந்து தனது பட சூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் குமாரின் மனைவியான ஷாலினிக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னை தொடர்ந்து நடிகை ஷாலினிக்கு ஒரு மைனர் சர்ஜரி நடைபெற்றதாகவும், இன்னும் நடிகை ஷாலினி முழுமையாக குணமடையவில்லை என்று தகவல்கள் வெளியாகி அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது விடா முயற்சி சூட்டிங்கில் அஜர்பைஜானில் உள்ள அஜித் மருத்துவமனைக்கு ஷாலினியை வந்து பார்ப்பாரா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து வந்தது. ஆனால் அன்றைய தினமே படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த நாள் காலையிலேயே அஜித் சென்னைக்கு வந்து எனது மனைவி ஷாலினியை பார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. ஆனால் நடிகை ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் ஷாலினி தற்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில்  அஜித் மட்டும் ஷாலினி ஆகிய இருவரின் இரண்டாவது குழந்தையான ஆத்விக் உடல்நிலை குறைவோடு இருக்கும் தனது தாய் ஷாலினிக்கு  நெத்தியில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில் தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி அவரின் ரசிகர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிகை ஷாலினி உடல்நலக்குறைவோடு இருக்கும் பொழுதும் அவரின் குழந்தைகள் நடிகை ஷாலினியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக பலரும் கூறி வருகின்றனர். என்னைத் தொடர்ந்து ஷாலினிக்கு விரைவில் உடல்நலம் சரியாகி வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.