24 special

அமிஷாவிடம் மனம் நொந்து சொன்ன அண்ணாமலை...! புதியவர்களுக்கு வாய்ப்பே இல்லை?

annamalai ,
annamalai ,

அமிஷாவிடம் சொன்ன அண்ணாமலை...!ஈரோடு இடை தேர்தல் பரப்புரை நடைபெற்ற விதம் ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இரண்டும் போட்டி போட்டு கொண்டு பணம் பரிசு பொருள்களை விநியோகம் செய்யப்பட்ட விதம் குறித்து முழுமையான விவரத்தை அண்ணாமலை நேரடியாக உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிடம் கொடுத்து மனம் நொந்து பேசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


தொகுதிக்கு 45 கோடி முதல் 250 கோடி வரை செலவு செய்கிறார்கள், இதை தடுத்து நிறுத்தாத வரை தமிழக அரசியல் களத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு இல்லை என நொந்து போய் தெரிவித்து இருக்கிறாராம் அண்ணாமலை. இது குறித்து அரசல் புருஷலாக செய்திகள் வெளியான நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மனம் நொந்து பேசி இருக்கிறார்.

நானும் சீமான் போன்று பேச வேண்டிய நிலை வந்து விட்டது,  நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நடக்காத ஒன்றாக மாறிவிடும் மக்கள் மாறவில்லை என்றால் மாறி மாறி பணம் இருப்பவர்கள் மட்டுமே பணத்தை செலவு செய்து வாக்குகளை பெற வேண்டிய நிலை இருப்பதாக அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் நல்லது நடக்குமா என எதிர் பார்த்து காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.