24 special

வைரமுத்துவின் விமர்சனத்தை தவுடுபொடி ஆக்கிய அண்ணாமலை

Vairamuthu, annamalai
Vairamuthu, annamalai

செங்கோல் விவகாரத்தில் திமுக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக மாறி இருக்கும் சம்பவம் இப்போது அண்ணாமலை வைரமுத்து மீது வைத்த விமர்சனம் மூலம் வீதிக்கு வந்து இருக்கிறது.


நேற்றைய தினம் பேசிய அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் செங்கோல் சாய்ந்து விட்டது என பேசி இருக்கிறார், ஐயா முதல்வரே வைரமுத்து மீது ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை 19 புகார்கள் கொடுத்து இருக்கிறார்கள் அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

புகார் கொடுத்த அந்த பெண்ணை சமுகத்தில் இருந்து விளக்கி வைக்கும் நிலையில் தான் நீங்கள் செயல்பட்டீர்கள், முதல்வரே உங்கள் தந்தைக்கு நெருக்கமான வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் எல்லாம் செங்கோல் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது என அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் வைரமுத்து மற்றும் முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து பலரும், டெல்லியில் மல்யுத்த வீரர்கள் புகாரில் FIR பதிவு செய்தது போன்று வைரமுத்து மீதான சின்மயி கொடுத்த புகார் உட்பட 19 புகார்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்யவேண்டும் என இப்போது வீதிக்கு வீதி குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை வைத்து பாஜக மீது குற்றம் சுமத்தலாம் என திமுக கணக்கு போட்டு வேலை செய்த நிலையில் தற்போது வைரமுத்து மீதான அதே லெலவல் குற்றசாட்டில் எடுத்த நடவடிக்கை என்ன என அண்ணாமலை முதல்வரை நோக்கி எழுப்பி இருக்கும் கேள்வி திமுக நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறொன்றாக முடிந்து இருக்கிறது.