24 special

பொதுவெளியில் உண்மையை போட்டு உடைத்த அண்ணாமலை...!

Mk stalin,annamalai
Mk stalin,annamalai

சென்ற வாரம் பாட்னாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர் ஏன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற பகிரங்க உண்மையை அண்ணாமலை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார்..! 


பாட்னாவில் தேசிய அளவில் அனைத்து கட்சி கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது இதில் பிரதமர் மோடி அரசை வீழ்த்துவோம் எனக்கூறி அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைந்தனர், அப்பொழுது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்! ஆனால் கூட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் முன்னரே கூட்டத்திலிருந்து வெளியேறினார், அதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பப்பட்டதற்கு எனக்கு பிளைட்டுக்கு நேரமாகிவிட்டது அதனால் நான் வந்து விட்டேன் என கூறினார். 

இந்த நிலையில் தற்பொழுது நேற்று ஈரோட்டில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது அந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஏன் பாட்னாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற பகீர் தகவலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த கூட்டத்தில் அண்ணாமலை கூறியதாவது, 'ஏற்கனவே இவர்கள் பிஹாரியை பான்பராக்கு வாயன், வடக்கன் என்றெல்லாம் பேசி விட்டார்கள், அங்குள்ள செய்தியாளர்கள் இதை முதல்வரிடம் கேட்க வேண்டும் என காத்திருந்தனர். அது தவிர்க்கவே அந்த சந்திப்பில் கலந்து கொள்ளாமல் முதல்வர் அங்கிருந்து ஓடி வந்து விட்டார் என அண்ணாமலை கூறியது தற்பொழுது பரபரப்பாகியுள்ளது. 

பிளைட்டுக்கு நேரமாகிவிட்டது என முதல்வர் கூறியதாக இருந்தாலும் இந்த வாரம் அண்ணாமலை பீகாரிகளை திமுகவினர் பீடா வாயர்கள் என பேசிய காரணத்தினாலேயே பிஹாரிலிருந்து முதல்வர் வேகமாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் ஓடி வந்து விட்டார் என கூறியது தற்பொழுது இணையத்தில் வைரலாக உலா வருகிறது.