Tamilnadu

பா.சிதம்பரதிற்கு "புதிய பெயர்" சூட்டி பங்கம் செய்த அண்ணாமலை ? என்ன பெயர் தெரியுமா..?

annamalai and p chidambaram
annamalai and p chidambaram

பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார், தினமும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அரசியல் நிலைப்பாடு குறித்தும் தனது கடிதத்தில் அண்ணாமலை அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து வருகிறார்.


அந்த வகையில் அண்ணாமலை பா சிதம்பரத்தை ஊழல் பசி என குறிப்பிட்டுள்ளார் பாஜகவினருக்கு எழுதிய கடிதத்தில் ஊழல் பசியின் ஆதங்கம் என குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார் அது பின்வருமாறு :-' ஊழல் பசியின் ஆதங்கம்.... பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழகத்திலும் நம் கட்சி பலராலும், கவனிக்கப்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது., கண்காணிக்கப்படுகிறது.  நம் உள்கட்சி நிகழ்வுகள் கூட பேசு பொருளாகிறது. மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் நகைச்சுவை என நினைத்து தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன! நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சி்யின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்! :என்கிறார் ப.சிதம்பரம்.

கரைந்து போன கட்சியிலிருந்து  காணாமல் போன முன்னாள் தலைவர் தன் ஆதங்க முனகலை அறிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியைப் போல விழுந்து கிடக்கவில்லை எழும்பி நிற்க. பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் தன் தியாகத்தால் உழைப்பால் உருவாக்கிய திருக்கோவில்களாக மாவட்டத்  தலைமை அலுவலகங்கள் உயிர்ப்புடன் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

உங்கள் கட்சியைப்  போல, ஊழல் ப.சி.யுடன், கொள்ளைப் பணத்தில் வீடுகளை கட்டிடங்களை எந்த தனிநபரும் வாங்கிக்  குவிக்கவில்லை. பெரு மதிப்புள்ள அலுவலக கட்டிடங்கள் என்று தாங்கள் குறிப்பிட்டது சரிதான். அதன் சந்தை மதிப்பை நாங்கள் சொல்லவில்லை, எங்கள் கட்சி அலுவலகத்தை நாங்கள் கோவிலாக மதிக்கிறோம் அல்லவா,

அதன் மீது பெரும் மதிப்பை வைத்திருக்கிறோம் அல்லவா அதைத் தாங்கள்  பாராட்டியதற்கு நன்றி.  ஊழல்கள் பல செய்து ஊரெங்கும் உயர் மதிப்புள்ள கட்டிடங்களை வாங்கி குவித்ததால், ஊழலுக்காக சிறையில் இருந்தும்,  பிணையில் இருந்தும், உங்கள் பார்வையின் பழுது மட்டும் மாறவில்லை.

சொந்த கட்சியை, ஒரு மாநில கட்சிக்கு சொம்பு தூக்க வைத்து விட்டு, உண்மை தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு, கட்சியையும் தொண்டர்களையும் நடுத்தெருவில் நிறுத்திய உங்களைப் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு பாஜகவின் சாதனைகளை  கண்டவுடன் கண்களில் காப்பு காய்ப்பதில் வியப்பில்லை.

 உலகின் மிகப் பிரம்மாண்டமான கட்சி, அதிகப்படியான தொண்டர்களை தன்னகத்தே கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் தொண்டர்களின் உறுதியான கட்டமைப்பு உண்டு. கட்டிட அமைப்பு அந்தத்  தொண்டர்களால் உருவாக்கப்படுவது. இருக்கின்றீர்களா அல்லது இல்லையா என்று  தேடும் நிலையில் இருப்பது, தங்களின் கட்சியே.

பலமான அஸ்திவாரத்துடன் நாங்கள் எங்கள் கட்டமைப்பை தமிழகத்தில் கட்டத்  தொடங்கி விட்டோம். இப்படிப்பட்ட வாழ்த்துக்களை உங்களிடமிருந்து இன்னம் நிறையப் பெற வேண்டியிருக்கிறது பார்த்துக் கொண்டே இருங்கள்  வாழ்த்துக்களோடு காத்துக் கொண்டே இருங்கள் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.பா.சிதம்பரத்தை ஊழல் பசி எனவும் ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்கும் நபர் எனவும் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது, சிதம்பரம் ஆதரவாளர்களை சங்கடத்தில் தள்ளியுள்ளது.

More news from tnnews24