24 special

மேயர் ப்ரியாவிற்கு அண்ணாமலை கொடுத்த ஷாக் ...!

annamalai, mayor priya
annamalai, mayor priya

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நேற்று அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் பகுதியில் நடைபெற்ற காரணமாக அதிக முக்கியத்துவம் பெற்றது, யாத்திரைக்கு கரூர் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் பாஜகவினரால் செய்யப்பட்டது.அப்போது கரூர் ரவுண்டான அருகே பாஜகவினர் அண்ணாமலையை வரவேற்று வைத்து இருந்த பிளேக்ஸ் பேனர்களை திமுகவை சேர்ந்த மேயர் கவிதா நேரடியாக சென்று அகற்ற உத்தரவு போட்டார் மேலும் எவன் வரான் நா பார்த்துக்கிறேன் கழட்டு எனவும் துடுக்குடன் மேயர் கவிதா பேசியதாக செய்திகள் வெளியானது.


இந்நிலையில் தான் நேற்று யாத்திரையின் இறுதியில் பேசிய அண்ணாமலை தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது,செந்தில் பாலாஜியே உள்ளே இருக்கிறார், மத்திய அரசு அதிகாரி காயத்திரியை அடித்ததே முதலில் மேயர் கவிதா தான், வீடியோ ஆதாரம் இருக்கு,சிபிஐ விசாரணை நடைபெறுகிறது.நிச்சயம் மூன்று மாதத்தில் கரூர் மேயர் சிறை செல்வது உறுதி என தெரிவித்தார்,அண்ணாமலை இப்படி தெரிவித்தது தான் மிச்சம் அடுத்த நொடியே கரூர் மேயர் சிறைக்கு சென்றால் திமுகவில் அடுத்த மேயர் யார் என்ற கேள்வி இப்போதே கரூர் பகுதியில் பரவலாக பேச படுகிறது.

செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என சொன்னார் அதே போல சிறையில் இருக்கிறார், செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் ஊரை காலி செய்துவிட்டு ஓட்டம் எடுத்து இருக்கிறார், அதே போல் இப்போது அண்ணாமலை மேயர் கவிதா குறித்து கூறி இருக்கிறார் எனவே கண்டிப்பாக மேயர் கவிதா சிறை செல்வது உறுதி என பெரும்பாலான கரூரை சேர்ந்த திமுக கவுன்சிலர்களை பேச தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.