24 special

#BREAKING முக்கிய உத்தரவு போட்டார் மோடி. ...! எல்லையில் நடந்த திடீர் மாற்றம். ...! சரியான நேரத்தில் தொடங்கியது இந்தியா!

pmmodi ,amitsha
pmmodi ,amitsha

பிரதமர் மோடி இந்திய இராணுவம்,  உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் என மூவருக்கும் தனி தனியாக சொன்ன விஷயம் இப்போது பாகிஸ்தான் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான் மற்​றும் ராணுவம், கடற்​படை, விமானப்​படை தளப​தி​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் ஆகியோ​ருடன் பிரதமர் மோடி நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். எப்​போது, எங்​கு, எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம் என்​றும், முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம் என்​றும் இக்​கூட்​டத்​தில் பிரதமர் தெரி​வித்​தார்.


கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.இந்த சூழலில், மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான், ராணுவ தளபதி உபேந்​திர திவிவே​தி, கடற்​படை தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்​லி​யில் நேற்று பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​தனர்.

பிரதமரின் இல்​லத்​தில் சுமார் 90 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. அப்​போது, பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக​வும், அதற்கு தக்க பதிலடி கொடுப்​பது குறித்​தும் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, “தீ​விர​வாதத்தை வேரறுக்க வேண்​டும். பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்​டும். எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது, எந்த இடங்​களில் தாக்​குதல் நடத்த வேண்​டும், எப்​போது தாக்​குதல் நடத்த வேண்​டும் என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம். இந்த விவ​காரத்​தில் முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம்" என்று தெரி​வித்​தார்​.

இதற்கு ​முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், மத்​திய உள்​துறைச் செயலர் கோவிந்த் மோகன், எல்லை பாது​காப்​புப் படை, அசாம் ரைபிள்​ஸ், தேசிய பாது​காப்​புப் படை, மத்​திய ரிசர்வ் போலீஸ் படை, மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யின் தலை​வர்​கள், இயக்​குநர்​கள் பங்​கேற்​றனர்.

பிரதமர் மோடி இந்திய இராணுவம் பாகிஸ்தானில் உள்ளே இறங்கி பதிலடி கொடுக்கும் வேலையில் முழு கவனம் செலுத்த அஜித் டோவளிடம் பொறுப்பை கொடுத்து இருக்கிறார் அதே நேரத்தில் போர் நடக்கும் நேரத்தில் இந்தியாவில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது எனவும் நாட்டின் முழு சட்ட ஒழுங்கை பார்க்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பொறுப்பை கொடுத்து இருக்கிறார் மேலும் ஏன் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த காரணம் என்ன என கூறி உலக நாடுகள் ஆதரவை பெறவும் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அனைத்து முடிவுகளும் எடுக்க ஜெய்சங்கருக்கு உத்தரவு போட்டு இருக்கிறார். 

இவை அனைத்தும் நடந்த பின்பு RSS தலைவர் மோகன் பகவத்தை அழைத்து ஆலோசனை நடத்தி முழு வாருக்கு இந்தியா தயாராகி இருப்பதை விரிவாக விளக்கி இருக்கிறார் மோடி.  மொத்தத்தில் இந்தியா இந்த முறை கொடுக்கும் பதிலடி பாகிஸ்தான் கனவிலும் நினைக்காத வகையில் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.