24 special

கஷ்டப்பட்டாலும் இந்த மனுஷன் செய்யறத நிறுத்தல பாலாவின் சமீபத்திய சம்பவம்!

kpy bala
kpy bala

கே பி ஒய் பாலா என்று அழைக்கப்படும் விஜய் டிவியின் முக்கிய காமெடி நடிகராக இருக்கும் பாலா திரை உலகின் முன்னணி நடிகர்கள் செய்யத் தவறியதை தற்போது செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்று வருகிறார்.சாதாரண ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்த பாலா தனது திறமை மீது முழு நம்பிக்கையுடன் விஜய் டிவி என்கிற தனியார் தொலைக்காட்சி நிகழ்த்திய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி அதே தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் காமெடியனாகவும் வலம் வருகிறார். இப்படி சிறிது சிறிதாக தனது வாழ்க்கை தரத்தை உயர்த்துக் கொண்டு வரும் கே பி ஒய் பாலா தன் தேவைகள் போக இருக்கும் சேமிப்புகளை மக்களின் நலனுக்காக பசியோடு வருபவர்களுக்கு பசியை ஆற்றையும் பல உதவிகளை செய்து வருகிறார். 


ஆரம்பத்தில் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக பெரிதும் உதவி புரிந்து வந்த கே பி வைபாலா சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கடம்பூர் குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைக்காக தனது சொந்த செலவு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இதேபோன்று மருத்துவ வசதிகள் இல்லாத மலைவாழ் கிராம பகுதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ வசதிகளை செய்து தர உள்ளதாகவும் இது போன்ற பணிகள் என் தரப்பில் இருந்து தொடரும் என்றும் பாலா தெரிவித்தது இணையதளங்களில் அதிக பாராட்டுகளை பெற்றது. இதன் தொடர்ச்சியாக சேலம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில் வசித்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மற்றொரு ஆம்புலன்ஸையும் வாங்கி கிட்டத்தட்ட நான்கு ஆம்புலன்ஸை தன் செலவில் வாங்கி கொடுத்துள்ளார் பாலா! இப்படி கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வந்தார் பாலா. 

சமீபத்தில் சென்னை மாநகரில் ஏற்பட்ட மழை பாதிப்பு பெருமளவில் இருந்தது. சென்னை முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் நிவாரண பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய பொருள்களும் கிடைக்காமல் மழை நீரில் தத்தளித்தனர். இதனால் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் கட்சிகள் தரப்பில் நிவாரண பொருட்களும் உணவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருள்களும் வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் பாலா தன் சேமிப்பில் இருந்த மூன்று லட்சம் ரூபாயை ஆயிரம் ஆயிரம் ஆகப் பிரித்து ஒரு குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபாயை வழங்கினார், மேலும் சில அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியுள்ளார். இதனை அடுத்து மழை வெள்ளம் முடிந்த பிறகும் தற்பொழுது பாலாவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது அதோடு அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது, அதுமட்டுமின்றி மழை பாதிப்பில் அவரது விரலும் காயம் அடைந்திருந்தது.

இருப்பினும் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இருந்த வந்த விண்ணப்பத்திற்கு பாலா உடனடியாக எப்படியோ பணத்தை ஏற்பாடு செய்து கோட்டகயப்பாக்கம் கிராமத்திற்கு மூன்று லட்சம் மதிப்புள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் கருவியை வழங்கி உள்ளார். அதாவது குடிநீரில் சுண்ணாம்பு அதிகமாக இருப்பதால் சிறுநீரகப் பிரச்சனை இப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகமாக உள்ளது என்று பாலாவிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர் அதனை அடுத்தே இந்த உடனடி உதவியை செய்துள்ளார் பாலா இது இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகிறது. இது மட்டுமல்லாமல் தங்களுக்கு தற்பொழுது சிறு வயது அதனால் சம்பாதிப்பதை மட்டுமின்றி வெளியில் இருந்தும் பணம் வாங்கி உதவி செய்வது கூடாது என பலரும் பாலாவிற்கு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.