24 special

அண்ணாமலை இணை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக போட்ட கணக்கு தெரியுமா..!

Annamalai
Annamalai

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் , இளம் வயதில் ஒருவர் ஒரு மாநிலத்தின் சட்டசபை பொது தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை பலருக்கு கொடுத்து இருக்கும் வேலையில் , இதன் பின்னணியில் பாஜக போட்ட கணக்குகளை பிரபல இளம் அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் கணக்கிட்டு கூறி இருக்கிறார் அதில்,


கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் வெறும் கௌரவப்பதவி இல்லை.கிட்டத்தட்ட போர்படைத் தளபதியை போல பணி செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கும் பொறுப்பாகும்..

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்ற கடும் பிரச்சாரத்தை முறியடித்து,மிக மிக நுணுக்கமான செயல்பாடுகள் வழியே மீண்டும் அதிகாரத்தை தக்க வைக்க பாஜக எடுத்துக் கொண்ட முக்கியமான ஆயுதம் அண்ணாமலை..

கல்யாண(hydrabad) கர்நாடகா - கித்தூரு(mumbai) கர்நாடகா - மத்திய கர்நாடகா - காரவளி(Coastal) கர்நாடகா - தென் கர்நாடகா - பெங்களூர் என ஆறு பிரிவுகளாகவும் 31 மாவட்டங்களாகவும் கர்நாடக மாநிலம் உள்ளது.

இந்த முறை ஒருங்கிணைந்த வடக்கு கர்நாடக பகுதியான கித்தூரு மற்றும் கல்யாண கர்நாடகங்களில் பாஜக தன் தொகுதிகளை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் ஒரு 50 தொகுதிகளை பாஜக வென்றால்தான் அதனால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிர்பந்தம் உள்ளது.

வடக்கு கர்நாடக பகுதியில் இந்த முறை பாஜகவை வீழ்த்துவதை கண்ணும் கருத்துமாக செய்ய சித்தராமய்யா காத்திருக்கிறார்.வடக்கு கர்நாடக பகுதியில் சித்தராமய்யாவின் செல்வாக்கு வலுவாக ஓங்கியுள்ளது.

தான் போட்டியிடும் கோலார் பகுதியில் எதிரியே இல்லாமல் இருப்பதாலே வடக்கு கர்நாடக பகுதியில் தன் கவனத்தை முழுமையாக வைக்க முடிகிறது சித்துவால் என்கிற அரசியல்  பார்வை நியாயமானது.

அதே சமயம் அங்கே பெல்காவி போன்ற மாவட்டங்களில் அண்ணாமலையின் புகழ் உச்சத்தில் உள்ளது.காரணம் தாதா பன்னஞ்ஞே ராஜாவை மொராக்கா வரை சென்று கைது செய்து வந்தது திரு.அண்ணாமலை அவர்கள்தான்.

மிகக்கொடூரமான,தாவூத்தின் முன்னாள் கூட்டாளியான பன்னஞ்சே ராஜாவை அவர் வேட்டையாடியதும்,பாஜக மாநிலத் தலைவரான பிறகும் அவனுக்கு எதிராக அவர் சென்ற வருடம் சாட்சி சொன்னதும் கூட மக்களிடையே வெகுபிரபலம்..இப்படி நேர்மை மற்றும் வீரத்தின் அடையாளமாக அங்கே மக்களிடம் உள்ளார் திரு.அண்ணாமலை.நிற்க.

இந்த முறை கோலார் தொகுதியை விட்டு சித்தராமய்யா நகரவே கூடாது என்கிற யுக்தியோடுதான் அண்ணாமலை களமிறங்குகிறார்.இதுபோல பல முக்கியமான காங்கிரஸ் செயல்பாட்டாளர்கள் தங்கள் தொகுதிகளை விட்டு வெளியே வராமல் தேக்கி நிறுத்தும் யுக்தியுடனும் கர்நாடகா செல்கிறார் அண்ணாமலை..

எடியூரப்பாவின் வலிமையான கோட்டையான மத்திய கர்நாடகத்திலும் பாஜக தன் தொகுதிகளை தக்க வைக்க பாடுபடவேண்டும்.பெங்களூருக்குள் உள்ள 32 தொகுதிகளில் பாதிக்கு பாதி தொகுதிகளை வெல்ல வேண்டும்.

கடலோர கர்நாடகம் ஹிந்துத்துவ கோட்டையாக இருந்தாலும் இந்த முறை பல சிக்கல்களை அங்கே பாஜக சந்திக்கிறது.பாஜகவிற்கு சாதகமான பல தொகுதிகள் சில ஆயிரம் சொற்ப வாக்குகளில் அவற்றை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.அண்ணாமலையின் வலிமையான செல்வாக்குள்ள பகுதிகளாக கடலோர மாவட்டங்கள் உள்ளன..

எந்த நேரமும் கலவரம் வரலாம்,அமைதியின்மை உருவாகலாம் என்றிருக்கும் கடலோர மாவட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டு செய்த மக்களிடையே புகழ்பெற்றார் திரு.அண்ணாமலை.உத்தர மற்றும் தக்ஷிண கன்னட மக்களின் அன்பை பெற்றவர்.

ஆகவே,இளைஞர்கள் மத்தியில் சூழ்ந்துள்ள நம்பிக்கையின்மையை சரி செய்யவும்,அரசின் மீது அதீத ஊழல் குற்றசாட்டுகள் பரவி நிற்கும் இந்த சூழலில் திரு.அண்ணாமலையின் இமேஜை பாஜக பயன்படுத்திக் கொள்ளவே அவரை பொறுப்பாளராக ஆக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த கர்நாடகா முழுக்கவும் கட்சி சார்பற்ற இளைஞர்களையும் பாஜக பக்கம் திருப்ப வேண்டிய தேவையுள்ளது.ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டுப்படுத்தி,இந்துத்துவ அரசியலை வளர்ச்சியோடு இணைத்துப் பேசி பிரச்சாரம் செய்ய அண்ணாமலையின் வியூகம் அங்கே தேவைப்படுகிறது.

கர்நாடகாவை பொறுத்தவரை 200 தொகுதிகளில் ஒரு சினிமா நாயகனுக்கு இருக்கும் மரியாதை அண்ணாமலைக்கு உள்ளது.காங்கிரஸிற்கு எதிராக கன்னட மொழியில் அவர் செய்யும் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதாலே அவரை பொறுப்பாளராக நியமிப்பதில் பாஜக மும்மரம் காட்டியது.

கர்நாடகாவில் பாஜக மீண்டும் அரியணை ஏறினால் அது இனிமேல் நடக்கும் யுக்திகளையும்,பிரச்சாரங்களையும் மையப்படுத்தி மட்டுமே.அதுபோல ஒரு மாநிலத் தலைவராக குறுகிய காலத்தில் நியமிக்கப்பட்ட திரு.அண்ணாமலை,அதற்குள் பெரிய மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக பணி செய்வதும் அவருடைய எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமையும்..என குறிப்பிட்டு இருக்கிறார் சுந்தர் ராஜ சோழன் .