24 special

பிரதமராக எடப்பாடி பழனிசாமி..? சசிகலா கொடுத்த பதில்!

edapadi, sasikala
edapadi, sasikala

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61 வது குருபூஜை மற்றும் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு செல்ல சென்னையில் இருந்து மதுரை வந்த வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்து கூறியது;கடந்த இரண்டு ஆண்டுகளாக பசும்பொன்னிற்கு வராத எடப்பாடி பழனிசாமி தற்போது வர துடிப்பதற்கு முக்கிய கரணம் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது அதனை கண்டு வருகிறாரா? என்ற கேள்விக்கு விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை.


தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியா என்பதற்கு தேர்தல் சமயத்தில்தான் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமாடுகிறதா என்று கேட்டால், எனக்கு அப்படித் தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அந்த சமயத்தில் ஒருவர் வாயில் அருகில் வரும் அளவுக்கு காவலர்கள் என்ன செய்தார்கள். ஒருவேளை அவரை முன்கூட்டியே பிடித்திருந்தாலும் மறைக்காமல் தெரிவித்து இருக்கலாம்.

யார் பிரதமராவது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். நீங்களும் நானும் தனிமனிதராக எதுவும் சொல்ல முடியாது. இபிஎஸ் பிரதமராவது என்பது அவர்களின் ஆசை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் உள்ளது. எங்கள் கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல தான் அவர் (ஓபிஎஸ்) விருந்தாளி இல்லை. இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவை கொடுத்தார்கள். அது மீனவர்களுக்கு நல்ல விஷயமா.

மீனவர்கள் எப்படி போனால் என்ன என்கிற நினைப்பில் தான் அன்றைக்கே அவர்கள் செய்திருக்க வேண்டும் அதனால் அவர்களிடம் இன்று மீனவர்களுக்கு உதவியை எதிர்பார்ப்பது தவறு என்று நான் நினைக்கிறேன்.மக்களுக்கு தெரியும் யார் ஆட்சியில் என்ன செய்தார்கள் மக்களுக்கு அது சென்று சேர்ந்ததா என்று மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் சொன்னதை எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு.

தேர்தலுக்கு முன்பு அனைவரையும் ஒன்றிணைப்பீர்களா, இபிஎஸ் இடம் இருப்பதுதான் அதிமுக என தேர்தல் ஆணையமும் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சிவில் வழக்கு தீர்ப்பு இன்னும் வரவில்லை. அந்தத் தீர்ப்பு வந்தால்தான் இறுதி முடிவு என தேர்தல் ஆணையும் சொல்லியுள்ளது. தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் அந்தக் கடிதத்தை தான் கொடுத்திருக்கிறது.மேலும் அதிமுகவில் நீங்கள் பொதுச்செயலாளர் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரா என்ற கேள்விக்கு, பதில் அளித்த அவர், அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட போது என்ன நிலைமை இருந்ததோ அதுதான் அதிமுக நிலைமை.

தொண்டர்களை தொடர்ந்து சந்தித்து தான் வருகிறேன் தேர்தலும் வருகிறது விரைவில் சுற்றுப்பயணம் ஆரம்பிப்பேன் என்றார்.இந்த கருத்தை பார்க்கும்போது சசிகலா அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்றும் அவர் இபிஎஸ்ஷை அதிமுகவில் இருந்து கழட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பாஜகவுடனான கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இணைந்தால் இந்த மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில் அரசியில் எண்ணத்தை வைத்து எடப்பாடிபழனிசாமி ராமநாதபுரம் சென்ற இபிஎஸ்க்கு எதிராக தேவர் சமுதாய மக்கள் கோஷம் எழுப்பியது பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.