24 special

பாஜக கொடி கம்பம் அகற்றியதற்கு....அண்ணாமலை தேதி குறித்தார்!...அப்படி போடு.!

mk stalin, annamalai
mk stalin, annamalai

சென்னை அருகே உள்ள பனையூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை  வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு முன் பாஜக நிர்வாகிகள் சுமார் 50 அடி  உயரமுள்ள பாஜகவின் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியானது இன்று நடைபெற இருந்தது.இதற்கிடையில் நள்ளிரவில் திமுகவினரின் கொடிகம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மூலம் அகற்றி பாஜக நிர்வாகிகள் 200 பேரை கைது செய்தது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வெளியிட்டு உள்ள அறிக்கையில், 


சென்னை புறநகரில் உள்ள தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றி பா.ஜனதா தொண்டர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. திமுக அரசின் பழி வாங்கும் அரசியலின் ஒரு பகுதிதான் இது. ஜனநாயக உரிமைகளை முடக்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி திமுகவை அதிர வைத்துள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை திமுகவினரை அதிரவிட்டுள்ளது. திமுக அரசின் இந்த மாதிரி மிரட்டல்களுக்கு பாரதிய ஜனதா கட்சி பயப்படாது. ஆளும் திமுக அரசின் பல்வேறு ஜனநாயக விரோத கொள்கைகள் மற்றும் தவறான ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். என்று தெரிவித்துள்ளார். 

இதுவரை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை சுட்டி காட்டியுள்ளார். அதில், குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக  கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.