24 special

முதல்வரிடமே நேரடியாக கேள்வியை கேட்ட பிரான்ஸ் தமிழச்சி...லூலூ விவகாரத்தில் சிக்கப் போகும் அறிவாலய முக்கிய புள்ளிகள்!!

mkstalin
mkstalin

ஒரு குடும்பத்தில் ஆண் மட்டுமே நிதியில் சுதந்திரம் அடைந்தால் போதும் என்று பார்க்கப்பட்ட காலம் தற்போது மலையேறி விட்டது. ஒரு பெண்ணும் தனக்கான தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் தான் வருமானம் மற்றும் பணம் ரீதியாக சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் குறிக்கோளாக கொண்டு தனது கடுமையான முயற்சிகளை முன்வைத்து குடும்பம் மற்றும் தனது வேலையையும் மிகவும் திறமையாக கையாண்டு வருகின்றனர்.


அதுமட்டுமின்றி பல பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக பல தொழில்களில் சிறந்து விளங்குகிறார்கள் தொழில் முனைவோர்களாகவும் பல துறைகளில் முக்கிய அதிகாரிகளாகவும் சிறந்து விளங்குகிறார்கள் இன்னும் பல பெண்கள் அவர்களை தங்கள் ரோல் மாடலாக வைத்துக் கொண்டு முன்னேறவும் முயற்சி செய்கிறார்கள் ஆனால் அப்படிப்பட்ட பெண்களை ஒட்டுமொத்தமாக முடக்கும் வகையில் தமிழகத்தில் பரவலாக ஒரு பரபரப்பு இருந்த வண்ணமே உள்ளது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு லூலூ மாபியாவின் முக்கிய தலைவியான லூலு தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களில் உள்ள பெண்களை அதுவும் வீட்டில் தனிமையாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை தவறான முறையில் வழிநடத்தி தவறான வழியிலும் ஈடுபட வைத்து பிறகு அவர்களின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களையே மிரட்டி அவர்களை பாலியல் ரீதியான உறவுக்கு வற்புறுத்தி தள்ளி வந்த விவகாரம் அதில் பாதிக்கப்பட்ட பெண்ணால் புகார் அளிக்கப்பட்டதன் மூலம் தெரியவந்தது. 

இதனை அடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் இது குறித்த புகாரை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டதிலும் இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவந்ததை அடுத்து லுலூவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது அப்பொழுது தனது தாயின் இறுதி சடங்கிற்காக வெளிநாட்டிலிருந்து கேரளா வழியாக தமிழகத்திற்கு வர முயற்சித்த லூலுவை சுங்க அதிகாரிகள் கைது செய்து ஒப்படைத்த பொழுது அவர் தனது தாயின் இறுதி சடங்கை முன்வைத்து ஜாமினில் வெளிவந்தார். அன்று இவர் எளிதாக ஜாமினில் வெளிவந்து விட்டார் ஆனால் அதற்குப் பிறகு வெளியான ஒவ்வொரு தகவல்களுமே திடுக்கிடும் தகவலாக இருக்கிறது. அந்த திடுக்கிடும் தகவல்கள் அனைத்தும் எப்படிப்பட்ட ஒரு நாச வழியில் பெண்களை ஈடுபடுத்திய ஒரு பெண் ஜாமினில் வெளிவந்தார் என்பது தற்போது சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் பதட்டத்திலும் ஆழ்த்தி உள்ளது. ஏனென்றால் இந்தப் பெண்ணிற்கு பின்னால் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் தலையீடு இருப்பதாகவும் அவர்களுக்கும் இந்த லூலுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக நடந்த ஒரு பேட்டி ஒன்றில் சமூக ஆர்வலரான பிரான்ஸ் தமிழச்சி ஓபன் ஆக பேசியிருந்தார். 

இதனை தொடர்ந்து பல பெண்கள் இதுகுறித்த புகார்களை சமூக வலைத்தளத்தில் ஆதாரங்களோடு வெளியிட்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் திமுக அரசு இதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குறிப்பாக கூறப்போனால் இந்த பிரச்சனையை பெரிதாகவே திமுக எடுத்துக் கொள்ளாமல் தட்டிக் கழித்தும் கண்மூடித்தனமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தமிழச்சி அதிர்ச்சி தரக்கூடிய பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது பாலியல் குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகின்ற லூலு தற்போதைய திமுக அமைச்சரும் திமுக வட்டாரத்திற்குள் அடுத்த துணை முதல்வர் என்று பேசப்படுகிற உதயநிதியை சந்தித்ததாக கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி இந்த சந்திப்பு நடந்தது உண்மைதானா என்று நேரடியாகவே முதல்வரையும் கேள்வி கேட்டு அவரையும் இணைத்து பதிவிட்டுள்ளார் இந்த விவகாரத்தில்! அதுமட்டுமின்றி லூலு மாபியா பாலியல் குற்றங்களுக்கும் திமுக பிரமுகர்கள் சிலருக்கு உள்ள தொடர்பை அலட்சியப்படுத்தி கண்டுகொள்ளாமல் விடலாம் என்று செய்கிறீர்களா? அதற்கான முயற்சிகள் ஏதேனும் நடக்கிறதா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார். இது அரசியல் வட்டார முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.