24 special

மீண்டும் புது சர்ச்சையை கிளப்பிய காயத்ரி! ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமித்ஷாவுக்கே Tag..!

Gayathiri rahuram,  annamalai
Gayathiri rahuram, annamalai

பாஜக மாநில தலைமையால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும் காயத்ரி ரகுராம் தற்போது மேலும் மேலும் ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டி மூலம் அவர் சிக்கியது மட்டும் இல்லாமல் கட்சியின் பிற தலைவர்கள் பெயரை கூறி அவர்கள் பணியாற்ற வில்லையா? என கேள்வி எழுப்பியதன் மூலம் புது சிக்கலில் மேலும் சிலரது பெயரையும் சிக்க வைத்து இருக்கிறார் என்கின்றன கமலாலாய வட்டாரங்கள்.


ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான காயத்ரி ரகுராம் சமீபத்தில் தெரிவித்ததாவது.., “நான் பேட்டியளித்தாக இன்று செய்தித் தாள்களில் வந்துள்ளவற்றுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.

நான் சொன்னதாக வரும்  போட்டோ கார்டுகளில் பல போலியாக பரப்பப்பட்டு வருகின்றன. நான் கொடுக்கும் வீடியோ பேட்டிகளைத் தவிர வேறு எதையும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டிருக்கும் காயத்ரி ரகுராம், “பாஜகவில் சுதந்திரமாக பணியாற்ற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் குறிவைக்கப்பட்டேன்,  முதலில் நான் திமுக, விடுதலைச் சிறுத்தை கட்சியினரால் ட்ரோல் செய்யப்பட்டேன்.

இப்போது வலது சாரிகளாலும் நான் ட்ரோல் செய்யப்படுகிறேன். நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதால் பெரும்பாலான இரவுகளில் நான் சரியாக தூங்கவில்லை.கட்சியின் பொறுப்புகளில்  இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எனது பணியை களத்தில் ஒரு தொண்டராக  செய்து, மக்களைச் சென்றடைவேன்.

அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பணி செய்ய அனுமதியுங்கள்.நமது தலைசிறந்த தலைவர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் இத்தகைய இடைவெளிகளை சந்தித்துள்ளனர். காலம் என் காயங்களை ஆற்றும்.

என்னை வெளியேற்ற விரும்பியவர்கள், நீங்கள் விரும்பியதை அடைந்துவிட்டீர்கள். ஆம் நான் நீண்ட காலமாக சுய அழிவு நிலையில் இருந்தேன்.

என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்புபியவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்… தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில்  சீதையின் அக்னி பரிட்சை போன்று பிஜேபி மீதான விசுவாசத்தை நிரூபிப்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை” என்று பொங்கித் தீர்த்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல், ஷோகாஸ் நோட்டீஸ் கூட கொடுக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று காயத்ரி ரகுராம் சொல்லி வந்த நிலையில்தான், ’என்னை நிரூபிக்கத் தயார்’ என்று மீண்டும் கூறியுள்ளார்.

இப்படி ஒரு பக்கம் காயத்ரி ரகுராம் தனது நிலைப்பாட்டை நிரூபிக்க சீதை போன்று தீக்குளிக்க சரி என்று கூறிய நிலையில் அதே நேரத்தில் அண்ணாமலை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பஸ் என்ற ஒன்று இருந்தால் நாளு பேர் இறங்கினால் தான் புதியவர்கள் ஏற முடியும், முதியவர்கள் இறங்கினால் புதியவர்கள் பஸ்ஸில் ஏறுவார்கள் அது தான் அரசியல் என குறிப்பிட்டார்.

இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அப்படியே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிட்ஷா, பாஜக தேசிய பொது செயலாளர் B.L.சந்தோஷ் போன்றவர்களை டேக் செய்துள்ளார் காயத்ரி, அதாவது அண்ணாமலை கட்சியின் சீனியர்களுக்கு எதிராக செயல்படுகிறார் என சொல்லாமல் சொல்கிறாராம் காயத்ரி.

ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான காயத்ரி கட்சி மற்றும் அவரது எதிர்காலம் கருதி அமைதியாக கடந்து சென்றால் கட்சியில் மீண்டும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சேர்த்து கொள்வாரே தவிர மீண்டும் மீண்டும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் நிரந்தரமாக கட்சியில் இருந்து வெளியேற்ற படுவதுடன் அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது.