24 special

எங்க ஊர் எம்எல்ஏ அவரு... கம்ப்யூட்டர் படிக்க வச்சாரு... திரும்ப பாக்கமுடியாத உங்கள...கண்ணீரில் ரசிகை...

vijayakanth
vijayakanth

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்த நிலையில் அவருக்காக லட்சோப லட்ச மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.  நேற்றிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரசிகர்கள் தொண்டர்கள், அஞ்சலி செலுத்த  கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் சாலையிலே தூங்கி கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டு வருகின்றனர். சினிமாவிலும் சரி அரசியலும் சரி பொதுமக்களுக்கு இவர் செய்யாத உதவிகளே இல்லை என கூறலாம் .


அந்த அளவிற்கு வாரி வாரி கொடுத்த வள்ளல் கை எங்கள் விஜயகாந்த என ஒவ்வொரு ரசிகர்களும் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், மௌன அஞ்சலி, ஊர்வலம் , மெழுழுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். இதுமட்டுமின்றி  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில்  வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர். அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொண்டர்கள் மொட்டை அடித்து தங்களது நன்றி கடனை செலுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில்,  விஜயகாந்தின் தீவிர ரசிகையின் இரங்கல் செய்தி வைரலாகி வருகிறது. கேப்டன் விருத்தாசலம்ல முதன் முறையாக எம்எல்ஏ ஆனபோது கம்ப்யூட்டர் கிளாஸ் பத்தி எல்லாம் கோசிக்கச்கூட பார்க்க முடியாத எங்கள போல மிடில் கிளாஸ் லேடிஸ்க்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தினார் என கூறி கம்ப்யூட்டர் கிளாஸ்ல வாங்கின சர்ட்டிபிக்கேட்டை பதிவிட்டுள்ளார்.. சினிமால கேப்டன் ஆ அவர ரொம்ப பிடிச்சாலும் எங்க ஊர் எம்எல்ஏ வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல் பாசம்  அதிகமாச்சு. MISS YOU SIR என கண்ணீர் மல்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.