24 special

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அல்ல தந்திர மாடல் ஆட்சி....தடாலடியாக பேசிய இபிஎஸ்!

Stalin, Edappadi palanisamy
Stalin, Edappadi palanisamy

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை என்று அவப்போது எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார்.


சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி டெங்கு, ஃப்ளு போன்ற விஷக் காய்ச்சல்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்திட வேண்டும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகி விட்டது. ஒரு திறமையில்லாத, ஒருவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பது வேதனையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார். இன்றைய ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சர், பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, தரவுகளை பெற்றுள்ளார்.

அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று சொல்லிவிட்டு அதற்கான பேருந்துகளை தந்திரமாக அரசு குறைத்துள்ளது. அதேபோல் பெண் பயணிகளிடம் சாதி, கைபேசி எண் விவரம் கேட்கப்படுவது சிக்கலை ஏற்படுத்தும், வண்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். இது திராவிட மாடல் ஆட்சி அல்ல தந்திர மாடல் ஆட்சி என விமர்சனம் செய்தார். மக்களை ஏமாற்றுகிற ஆட்சி திமுக ஆட்சி என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கிய தொகுப்பில் ஒழுகும் நிலையில் வெல்லம் இருந்தது. தமிழ்நாட்டில் வெல்லம் தயாரிக்கப்படாதது போல் வெளிமாநிலத்தில் இருந்து தரமற்ற வெல்லத்தை வாங்கிக் கொடுத்தனர். பொங்கல் தொகுப்பில் நடந்த மோசடி தொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டாவது தரமான பொங்கல் பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்திருந்தால், கர்நாடகா அரசு தண்ணீர் வழங்கியிருக்கும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தண்ணீர் கிடைத்திருந்தால் தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடியை காப்பாற்றியிருக்கலாம் என்று தெரிவித்தார். அதேபோல், திமுக அரசு விவசாயிகளைக் காக்கத் தவறிவிட்டது. முதல்வர் நானும் டெல்டாகாரன் தான் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. டெல்டா விவசாயிகளுக்கு பாசனத்துக்குத் தேவையான உரிய நீர் ஆதாரத்தைப் பெற்றுத் தர வேண்டும். ஏற்கெனவே குறுவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் வேதனையில் இருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு உரிய உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.