24 special

அதிகரித்து வரும் கட்டாய மதமாற்றம்!!!

UDHAYANITHI, IG PONMANIKAVEL
UDHAYANITHI, IG PONMANIKAVEL

நம் இந்திய நாடு என்பது மத வேறுபாடு இன்றி ஒன்றாக அனைவரும் வாழ்ந்து வரும் நாடாகும்!! எனினும் இங்கு அதிக அளவில் ஹிந்து மதத்தினை சார்ந்த மக்களே பெருமளவு உள்ளனர். இருப்பினும் இங்கு இருக்கும் ஹிந்து மதத்தினர் மற்ற மதத்தினரையும் சமமாக கருதி பழகி வருகின்றனர். என்னதான்  தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றாக பழகி வரவேண்டும் என்று மக்கள் இடையே ஒரு கருத்து இருந்தாலும், அதனை அரசியலாக மாற்றி பிரிவு ஏற்படுத்துவதற்காகவே ஒரு தனி கூட்டமே உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுக தான்!! சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசி பல சர்ச்சைகளுக்கு ஆளானார்!! மேலும் அதில் அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் இந்து மக்களை எதிர்ப்பது போன்று இருந்தது. இது குறித்து பல பத்திரிக்கை மற்றும் இணையங்களில் உதயநிதி பேசிய அனைத்தும் வெளியாகி இருந்தது.


அதில் அவர் டெங்கு மலேரியா கொசுக்களை போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பல இடங்களிலும் உதயநிதிக்கு எதிராக  போராட்டங்கள் ஏற்பட்டது. இதற்கு இந்து மத சார்பில் உள்ளவர்களும் பெரும் கண்டனத்தை முன்வைத்தனர்.சமூக வலைதளங்களிலும் இது பற்றி பல கருத்துக்கள் எழுந்தது. இது போன்ற விவகாரத்திற்கு பின்னர் சனாதன தர்மத்தை கட்டி காக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் மேலும் அதை இன்னும் வளர்ந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சிலர் செய்த போஸ்ட், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது, இதுவரையிலும் இவை இணையத்தில் வைரலாகி கொண்டு தான் உள்ளது. இது தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து தற்போது இந்து மதத்திற்கு மதம் மாறி உள்ளனர். லிவிங்ஸ்டன் மற்றும் நடிகர் விஜயின் தந்தை எஸ் எ சந்திரசேகர் கூட இந்து மதத்திற்கு மாறியுள்ளார்! இது போன்ற நிகழ்வுகளும் தற்போது பரவலாக பார்க்க முடிகிறது. இருந்தாலும் திமுக மட்டும் இந்த ஹிந்து எதிர்ப்பினை கைவிடவே இல்லை. 

மேலும் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் பல கோவில்கள் ஆரம்பிக்கப்பட்டு அளிக்கப்படுகின்றது. மேலும் கோவில் சத்துக்கள் அனைத்தும் அபகரிக்கப்படுவதாகவும் பல செய்திகள் எழுந்து வருகிறது இது குறித்து முன்னாள் ஐ. ஜி. பொன்மாணிக்க வேல் கூட இவர் ஊர் இந்த அமைப்பினை பயன்படுத்தி பல சொத்துக்களை அபகரிக்கின்றனர் என்று கூறியுள்ளார். பல கிராமங்கள் மற்றும் நகரங்களை தாண்டி உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்து மதம் மாற சொல்லுவது, தத்துவத்தை பற்றி போற்றி புகழ்வதற்கே இன்று ஒரு குழு தனியாக உள்ளார்கள் தற்போது இது அதிக அளவில் உள்ளது. மதமாற்றம் என்பதை ஏற்படுத்த வேண்டும் என்று பல குழுக்கள் இதே வேலையாக கொண்டு செயல்படுவது அதிகமாக ஆகிக்கொண்டே தான் உள்ளது.

ஒரு கட்டாய மதம் மாற்றத்தினால் சினிமாவை சேர்ந்த ஒரு பிரபலம் கூட பாதிக்கப்பட்டுள்ளர். அது இது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறதே பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அதாவது சினிமாவில் சின்னத்திரைகளில் நடித்து வரும் சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில் தனது சினிமாவின் ஆரம்ப காலத்தில் தனது குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என்று வற்புறுத்தி மதம் மாற வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். குழந்தைகளின் கல்விக்காக கூட பார்க்காமல் இப்படி எல்லாம் செய்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது!!! அதுவும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைக்கு இது ஏற்பட்டுள்ளது என்பதும் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.